மே.வங்கத்தில் திரிணமூல், பாஜகவுக்கு இணையாக மும்முனை போட்டிக்குத் தயாராகும் காங்கிரஸ்

ஆதீர் ரஞ்சன் சவுத்ரி

ஆதீர் ரஞ்சன் சவுத்ரி

Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் ஏப்​.23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் மற்​றும் பாஜக.வுக்கு இடை​யில் நேரடி போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில், மொத்​தம் உள்ள 294 தொகு​தி​களி​லும் தனித்​துப் போட்​டி​யிடும் காங்​கிரஸ், மும்​முனைப் போட்​டியை ஏற்​படுத்த முயற்​சிக்​கிறது.

இதன்​மூலம், மேற்கு வங்​கத்​தில் இழந்த நம்​பிக்​கையை மீட்​டெடுக்​க​வும் கணிச​மான தொகு​தி​களைக் கைப்​பற்றி தொண்​டர்​களைத் தக்க வைக்​க​வும் காங்​கிரஸ் தீவிர​மாக உள்​ளது. ஒரு​வேளை மம்​தா​வின் திரிண​மூல் கட்​சிக்​குப் பெரும்​பான்மை கிடைக்​கா​விட்​டால், அந்த நேரத்​தில் ‘கிங் மேக்​கர்’ அந்​தஸ்​தைப் பெற​வும் முடி​யும் என்று காங்​கிரஸ் கணக்கு போட்​டுள்​ளது. இதற்​காக, தேசிய மற்​றும் மாநில அளவில் பிரபல​மானவர்​களை வேட்​பாளர்​களாகக் காங்​கிரஸ் அறி​வித்​துள்​ளது.

குறிப்​பாக மூத்த தலை​வர்​கள் சுமார் 30 பேரை காங்​கிரஸ் வேட்​பாளர்​களாக நிறுத்​தி​யுள்​ளது. மால்​டா, முர்​ஷி​தா​பாத், வடக்கு தினாஜ்பூர் மற்​றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​களைக் கைப்​பற்​று​வ​தில் தீவிர கவனம் செலுத்​துகிறது. முஸ்​லிம்​கள் அதி​கம் இருப்​ப​தால் இந்த 4 மாவட்​டங்​களில்​தான் அக்​கட்​சி​யின் ஒட்​டுமொத்​தத் தேர்​தல் வியூ​க​மும் குவிந்​துள்​ளது. மவுசம் பெனசீர் நூர், ஆதீர் ரஞ்​சன் சவுத்ரி மற்​றும் மோஹித் சென்​குப்தா போன்ற முக்​கியப் பிர​முகர்​களின் பெயர்​கள் வேட்​பாளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளன.

இவர்​களில் ஆதீர் ரஞ்​சன் காங்​கிரஸ் கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர். அவரது பாரம்​பரியக் கோட்​டை​யான பஹராம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். ஏறக்​குறைய 30 ஆண்​டுக்​குப் பிறகு அவர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​கிறார். கடந்த 1996-ல் மக்​களவை தேர்​தலில் நபக்​ராம் தொகு​தி​யில் வெற்றி பெற்ற ஆதீர், தொடர்ந்து நாடாளு​மன்ற உறுப்​பின​ராகவே இருந்து வரு​கிறார். தற்​போது மீண்​டும் மாநிலத் தேர்​தலில் கட்சி களமிறக்கி உள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 1977-ல் ஆட்​சியை இழந்த பிறகு காங்​கிரஸுக்கு இறங்​கு​முகம் தொடங்​கியது. இடது​சா​ரி​களு​டன் கூட்​டணி அமைத்த பிறகும், காங்​கிரஸால் வெற்றி பெற முடிய​வில்​லை. 2021 தேர்​தலில் காங்​கிரஸால் ஒரு இடத்​தைக் கூடப் பெற முடிய​வில்​லை. அதன் வாக்கு சதவீத​மும் வெறும் 3 சதவீத​மாகக் குறைந்​தது.

ஆனால், காங்கிரஸில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதன்பிறகு இடதுசாரியும் காணாமல் போய்விட்டது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற மம்தா தீவிரமாக முயற்சிக்கிறார். இதன் விளை​வாக, 30 ஆண்​டுக்​குப் பிறகு வங்​காளத்​தில் தேர்​தலில் தனித்​துப்​ போட்​டி​யிட்டு கணிசமான தொகுதிகளைப் பெற காங்​கிரஸ்​ மும்முரமாக களமிறங்கி உள்ளது.

<div class="paragraphs"><p>ஆதீர் ரஞ்சன் சவுத்ரி</p></div>
அசாம் தேர்தலில் முதல்வர் உட்பட பல கோடீஸ்வரர்கள் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in