மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் நிறைவடைந்​தது. அந்த மாநிலத்​தின் 152 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது.

மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. முதல்​கட்​டத்​தில் 152 தொகு​தி​களுக்கு நாளை வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட உள்​ளது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் தேர்​தல் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் பாஜக தொண்​டர்​களுக்​கும் இடையே பல்​வேறு இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன. இதை கருத்​தில் கொண்டு முதல்​கட்ட தேர்​தலில் மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடும் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. அந்த தொகு​தி​யில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறும் பகு​தி​களில் இன்​றும் நாளை​யும் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மோட்​டார் சைக்​கிள்​கள் போக்​கு​வரத்​துக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்​டார் சைக்​கிள்​களில் ஒரு​வர் மட்​டுமே பயணம் மேற்​கொள்ள வேண்​டும். பின்​இருக்​கை​யில் யாரை​யும் ஏற்​றக்​கூ​டாது என்று தேர்​தல் ஆணை​யம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளது. மருத்​துவ தேவை, குடும்ப விழாக்​கள், பள்​ளி​களுக்கு மாணவ, மாண​வியரை அழைத்​துச் செல்​வது ஆகிய பணி​களுக்கு மட்​டும் விதி​விலக்கு அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதே​போல வீட்டு உபயோக பொருட்​கள், உணவு வகைகளை விநி​யோகம் செய்​யும் ஊழியர்​களுக்​கும் வி​தி​விலக்​கு அளிக்​கப்​பட்​டு உள்ளது.

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in