“மிகப்பெரிய எரிசக்தி சவாலை வெற்றிகரமாக சமாளித்தோம்” - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ராஜஸ்தானில் ரூ.79,459 கோடி செலவில் சுத்திகரிப்பு ஆலை தொடக்கம்
“மிகப்பெரிய எரிசக்தி சவாலை வெற்றிகரமாக சமாளித்தோம்” - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Updated on
2 min read

ஜெய்ப்பூர்: “உல​கின் மிகப்​பெரிய எரிசக்தி சவாலை வெற்​றிகர​மாக சமாளித்​தோம்” என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

ராஜஸ்​தானின் பார்​மர் பிராந்​தி​யம், தார் பாலை​வனத்​தில் சுமார் 38 எண்​ணெய் வயல்​கள் அமைந்​துள்​ளன. அந்த எண்​ணெய் வயல்களில் நாள்​தோறும் 1.8 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெய் எடுக்கப்படு​கிறது.

நாட்​டின் கச்சா எண்​ணெய் தேவை​யில் சுமார் 20 சதவீதத்தை பார்மர் எண்​ணெய் வயல்​கள் பூர்த்தி செய்​கின்​றன. அங்​கிருந்து 670 கி.மீ. தொலை​வில் இருக்​கும் குஜ​ராத்​தின் ஜாம் நகர் ரிலை​யன்ஸ் ஆலைக்கு குழாய் மூலம் கச்சா எண்​ணெய் கொண்டு செல்​லப்​பட்டு சுத்​தி​கரிக்கப்​படு​கிறது.

இதற்கு மாற்​றாக ராஜஸ்​தானிலேயே கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலையை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு செப்​டம்​பரில் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. ஆனால் உள்​ளூர் மக்​களின் கடும் எதிர்ப்பு காரண​மாக திட்​டம் கிடப்​பில் போடப்​பட்​டது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி​யில் ராஜஸ்​தானின் பலோத்ரா மாவட்​டம், பச்​சபத்​ரா​வில் கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலை அமைக்க பிரதமர் நரேந்​திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார். இதன்​பிறகு திட்​டப் பணி​கள் வேகம் பெற்​றன. இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் மற்​றும் ராஜஸ்​தான் அரசு இணைந்து 4,500 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.79,459 கோடி செல​வில் பிரம்​மாண்ட கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலையை அமைத்​துள்​ளன. இது, நாட்​டின் முதல் அதிநவீன பிஎஸ்-6 தரத்​தி​லான பெட்ரோ கெமிக்​கல் வளாகம் ஆகும்.

புதிய பச்​சபத்ரா கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலை​யைப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேற்கு ஆசியா போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்​குக் கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. 21-ம் நூற்​றாண்​டின் மிகப்​பெரிய எரிசக்தி சவாலை உலகம் எதிர்​கொண்​டது. எனினும் இந்த சவாலை இந்​தியா வெற்​றிகர​மாக சமாளித்​தது. கடந்த ஏப்​ரல், மே, ஜூன் மாதங்​களில் மட்​டும் எண்​ணெய் நிறு​வனங்​களுக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்​பட்​டது. இதை மத்​திய அரசே ஏற்​றுக் கொண்​டது.

மேற்கு ஆசிய போருக்கு முன்​பாக 25 நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெயைக் கொள்​முதல் செய்து வந்​தோம். போர்க் காலத்​தில் 40-க்​கும் மேற்​பட்ட நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கினோம். இதன்​மூலம் நாட்​டின் கச்சா எண்​ணெய் தேவை பூர்த்தி செய்​யப்​பட்​டது. இதே​போல நாட்​டின் எல்​பிஜி சமையல் காஸ் தேவையை​யும் வெற்​றிகர​மாக பூர்த்தி செய்​தோம்.

மேற்​காசிய போர் காரண​மாக வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.2,000 வரை உயரும் அபா​யம் எழுந்​தது. எனினும் மத்​திய அரசின் திறம்​பட்ட கொள்​கைகளால் சமையல் காஸ் விலை உயர​வில்​லை. எந்​தவொரு சவாலை​யும் எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு உள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

ஜோத்​பூர் விமான நிலை​யம்

ராஜஸ்​தானின் ஜோத்​பூர் விமான நிலை​யத்​தில் ரூ.480 கோடி செல​வில் புதிய முனை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த புதிய முனை​யத்​தைப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை திறந்து வைத்​தார். மேலும் புதுப்​பிக்​கப்​பட்ட உதான் திட்​டத்​தை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இந்த திட்​டத்​தின் கீழ் சிறிய நகரங்​களின் விமானப் போக்​கு​வரத்​துக்​காக அடுத்த 10 ஆண்​டு​களில் ரூ.28,840 கோடி செல​விடப்பட உள்​ளது.

பச்​சபத்ரா சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தில் நடந்த விழா​வின் போது ரூ.13,000 கோடி மதிப்​பிலான ஜெய்ப்​பூர் மெட்ரோ ரயில் திட்​டத்​துக்​குப் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் ரூ.900 கோடி மதிப்​பிலான சுரு-சதுல்​பூர், சுரு- ரத்​தன்​கர் ரயில் வழித்தட திட்​டங்​களை​யும் அவர் காணொலி வாயி​லாக தொடங்கி வைத்​தார். ராஜஸ்தானில் ஒட்டுமொத்தமாக ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

குஜ​ராத்​தில் செமி கண்​டக்​டர்

ராஜஸ்​தான் பயணத்தை தொடர்ந்து குஜ​ராத்​தின் சாணந்த் பகு​திக்கு பிரதமர் நரேந்​திர மோடி சென்​றார். அங்கு ரூ.7,500 கோடி முதலீட்​டில் கட்​டப்​பட்டு உள்ள செமி கண்​டக்​டர் ஆலையை அவர் திறந்து வைத்​தார். இந்​த ஆலை​யில்​ ஆண்​டுக்​கு 500 கோடி செமி கண்​டக்​டர்​ ‘சிப்​’களை தயாரிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டு உள்​ளது.

“மிகப்பெரிய எரிசக்தி சவாலை வெற்றிகரமாக சமாளித்தோம்” - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in