வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இளைஞர்களுக்கு அழைப்பு

வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இளைஞர்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அனைத்து துறை​களி​லும் வலு​வான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்​துள்​ளார்.

சுவாமி விவே​கானந்​தரின் பிறந்த தின​மான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தின​மாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, ‘வளர்ச்சி அடைந்த இந்​தி​யா​வுக்​கான இளம் தலை​வர்​களின் கலந்​துரை​யாடல் 2026' நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்​டபத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இரண்​டாவது நாளான நேற்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

எனக்​கும் இந்​திய இளைஞர்​களுக்​கும் 60 ஆண்​டு​கள் வயது வித்​தி​யாசம் உள்​ளது. நான் சுதந்​திரத்​துக்கு முந்​தைய இந்​தி​யா​வில் பிறந்​தேன். எனது நாடு வளர்ச்சி அடைய வேண்​டும் என்​பது மட்​டுமே எனது ஒரே நோக்​க​மாக இருந்​தது. எனது சிறு​வயது முதல் இப்​போது வரை இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்​காக உழைத்து வரு​கிறேன்.

உலகின் பல்​வேறு பகு​தி​களில் போர்​கள் நடை​பெற்று கொண்​டிருக்​கின்​றன. சில நாடு​கள் தங்​களது ஆதிக்​கத்தை நிலை​நாட்ட போர்​களை நடத்தி வரு​கின்​றன. நாம் வலு​வாக இருந்​தால் நம்மை யாராலும் ஒன்​றும் செய்ய முடி​யாது. நாம் சுதந்​திர​மாக வாழலாம்.

ஒரு நாட்​டுக்கு சிறந்த தலைமை தேவை. இப்​போது இந்​தி​யா​வுக்கு மிகச் சிறந்த தலைமை (பிரதமர் நரேந்​திர மோடி) கிடைத்​திருக்​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் ஆட்​சி​யில் புதிய உச்​சத்தை இந்​தியா எட்​டிப் பிடித்​துள்​ளது. இனிமேல் ‘ஆட்டோ பைலட்' முறை​யில் பயணித்​தால்​கூட வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை நிச்​சய​மாக எட்ட முடி​யும். ஒவ்​வொரு இந்​திய இளைஞரும் தன்​னம்​பிக்​கை​யுடன் செயல்பட வேண்​டும். எந்​தவொரு விஷ​யத்​தி​லும் துணிச்​சலாக முடி​வெடுக்க வேண்​டும். நீங்​கள் முன்​னேறி​னால், இந்​தி​யா​வும் முன்​னேறும்.

எல்​லைப் பாது​காப்​பு, பொருளா​தா​ரம், சமூக மேம்​பாடு என அனைத்து துறை​களி​லும் வலு​வான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும். இதற்கு இந்​திய இளைஞர்​கள்​ உறு​துணை​யாக இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு அஜித்​ தோவல்​ பேசி​னார்​.

வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இளைஞர்களுக்கு அழைப்பு
​ராமேசுவரத்​தில் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in