தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டம்

தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த தனி​யார் நிறு​வன​மான ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ், விக்​ரம்-1 என்ற ராக்​கெட்டை தயாரித்​துள்​ளது.

இந்​தி​யா​விலேயே தனி​யார் நிறு​வனம் தயாரித்த முதல் ராக்​கெட்​டாகும்​ (லாஞ்ச் வெஹிகிள்) இது. விண்​வெளி​யில் பூமி​யின் சுற்​றுப்​பாதை​யில் செயற்​கைக்​கோள்​களை நிலைநிறுத்​து​வதற்​கான ராக்​கெட்​டாக​வும் இது செயல்​படும். இந்த வகை ராக்​கெட்டை ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதிக்​குள்​ளாக விண்​வெளிக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​விலுள்ள சதீஷ் தவான் விண்​வெளி ஆராய்ச்சி மையத்​தில் இந்த ராக்​கெட் சோதனை செய்​யப்​பட​வுள்​ளது. இதுகுறித்து ஸ்கைரூட் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​ பவன் குமார் சந்​தனா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “ஸ்ரீஹரி​கோட்​டா​விலுள்ள ராக்​கெட் ஏவுதளத்​தில் இந்த விக்​ரம்-1 ராக்​கெட்டை ஏவி சோதனை செய்​யத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ராக்​கெட் பணி​களை ஒருங்​கிணைத்​தல், சோதித்​தல் பணி​கள் நிறைவடைதல், வானிலை, பாது​காப்​பு, ஏவுதள அனு​மதி ஆகிய​வற்​றைப் பொறுத்தே இதன் ஏவுதல் தேதி அறிவிக்​கப்​படும்” என்றார்.

தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டம்
20 ஆண்டு காலம் குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராப்ரி தேவி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in