“மகாத்மா காந்தி, படேல் மோடியை வழங்கிய குஜராத்” - சி.பி.ஆர் பெருமிதம்

“மகாத்மா காந்தி, படேல் மோடியை வழங்கிய குஜராத்” - சி.பி.ஆர் பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: ம​காத்மா காந்​தி, சர்​தார் வல்​லப ​பாய் படேல், பிரதமர் நரேந்​திர மோடி ஆகிய 3 பெரும் தலை​வர்​களை குஜ​ராத் மாநிலம் நாட்​டுக்கு வழங்​கி​யிருக்​கிறது என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் உள்ள காந்தி ஆசிரமத்​தில் ஹரிஜன் சேவை சங்​கத்​தில் மகாதேவ் தேசாய் நூல​கம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த நூல​கத்தை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: தமிழகத்​தின் மதுரை​யில் விவ​சா​யிகளின் வறுமை​யைக் கண்ட காந்​தி​யடிகள், மேற்​கத்​திய ஆடையை துறந்​து, வேட்​டியை மட்​டுமே அணிந்​தார். அவர் தனது வாழ்​நாள் முழு​வதும் சுதேசி கொள்​கையை ஊக்​கு​வித்​தார். மகாத்மா காந்​தி​யால் உரு​வாக்​கப்​பட்ட ஹரிஜன் சேவை சங்​கம் தீண்​டாமை உள்​ளிட்ட சமூக கொடுமை​களை எதிர்த்து போராடி வரு​கிறது. ஒவ்​வொரு தனி​நபரும் சமு​தா​யத்​துக்கு சேவை​யாற்ற வேண்​டும்.

நாட்டை கட்டி எழுப்ப உறு​துணை​யாக இருக்க வேண்​டும். நாட்​டின் வளர்ச்​சிக்கு குஜ​ராத் மிக முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருக்​கிறது. காந்​தி​யடிகள், சர்​தார் வல்​லப​பாய் படேல், பிரதமர் நரேந்​திர மோடி ஆகிய 3 பெரும் தலை​வர்​களை குஜ​ராத் மாநிலம் நாட்​டுக்கு வழங்​கி​யிருக்​கிறது. இவ்​வாறு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன்​ பேசி​னார்​.

“மகாத்மா காந்தி, படேல் மோடியை வழங்கிய குஜராத்” - சி.பி.ஆர் பெருமிதம்
ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், மேடிசன் கீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in