ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாக் கடன் - உ.பி. அரசு திட்டம்

ரூ.20,000 மானியம் அளிக்கவும் முடிவு
ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாக் கடன் - உ.பி. அரசு திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் ஒரு கோடி பெண்​களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்​சம் அளிக்க பாஜக அரசு முடிவு செய்​துள்​ளது. ‘பெண்​கள் தொழில்​முனை​வோர் கடன் திட்​டம்’ சார்பில் ரூ.20,000 வரை மானி​யம் அளிக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளது.

நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெண்​களைக் கவரும் திட்​டங்​கள் அமலாகி வருகின்​றன. இந்த வகை​யில், உத்தர பிரதேச சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்​தல் நடைபெற உள்ளது. இதற்காக பெண்​களைக் கவரும் வகை​யில் ஒரு திட்​டத்தை அமலாக்க பாஜக அரசு தயா​ராகி வரு​கிறது. இத்​திட்​டத்​தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்​களு​டன் இணைந்​துள்ள ஒரு கோடி பெண்​கள் ரூ.1 லட்​சம் வரையி​லான கடன் பெற முடி​யும்.

உ.பி.​யின் வாழ்​வா​தார இயக்​கத்​தின் கீழ் செயல்​படுத்​தப்​படும் மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ‘உத்​யமேஸ்​வரி கடன் திட்​டம்’ உள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், தனது தேர்​தல் உத்​தி​யின் ஒரு பகுதியை அமலாக்க உ.பி. அரசு தயா​ராகிறது. 2026-27 நிதியாண்டிற்​கான பட்​ஜெட்​டில் இத்​திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இதில், வட்​டி​யில்​லாக் கடனாக ரூ.1 லட்​சம் வழங்க உ.பி. அரசு திட்ட​மிட்​டுள்​ளது.

தேர்​தலுக்கு முன்​பாக இதற்​கான சிறப்​புக் கடன் அட்​டைகள் ஒரு கோடி பெண்​களுக்கு வழங்​கப்பட உள்​ளன. பெண்​கள் இத்​தொகை​யைக் கொண்டு சிறு தொழிலைத் தொடங்​கலாம் அல்லது ஏற்​க​னவே உள்ள தொழிலை விரிவுபடுத்​தலாம். முதல் கட்​டத்​தில் வழங்​கப்​பட்ட 20,000 ரூபாயைச் சரி​யான நேரத்​தில் திருப்​பிச் செலுத்​தி​னால், 2-ம் கட்​டத்​தில் 30,000 ரூபாய் கடன் வழங்கப்​படும்.

இரண்​டாம் கட்​டத் தவணை​யை​யும் திருப்​பிச் செலுத்​தி​னால், மூன்​றாம் கட்​டத்​தில் 50,000 ரூபாய் கடன் வழங்​கப்​படும். இதற்கான வரைவுத் திட்​டத்தை வங்​கி​கள் தயாரித்​துள்​ளன. அதற்கான விரி​வான திட்ட முன்​மொழிவை சம்​பந்​தப்​பட்ட ஊரகவளர்ச்​சித் துறை தயாரித்து வரு​கிறது. இந்​தத் தொகை​யான ரூ.1 லட்​சத்​தில் பெண்​கள், பசுக்​கள் மற்​றும் எரு​மை​களை வாங்கிப் பலன் பெறலாம்.

சுயஉதவிக் குழுக்​களின் பெண்​களுக்கு ரூ.2 லட்​சம் மதிப்​புள்ள தரமான மின்​-ரிக் ஷாக்​களை வழங்​கு​வதற்​கும் ஒரு திட்​டம் தயாராகி வரு​கிறது. இது​போன்ற பெண்​களுக்​கான சுயஉதவிக் குழுக்​கள் திட்ட அறி​விப்​பி​னால்​தான் பிஹார் சட்​டப்​பேர​வைத்தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக முன்னணி மீண்​டும் வெற்​றி பெற்​றது என்​ப​து குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாக் கடன் - உ.பி. அரசு திட்டம்
‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in