‘பூஜைக்கு மட்டுமே பண்டிதர்கள்... அரசை நிர்வகிப்பது பிற சமூகங்களின் பணி’ - ம.பி. பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

ம.பி சிந்த்​த​வாடா மாவட்ட பாஜக தலை​வ​ர் சேஷ்​ராவ் யாதவ்

ம.பி சிந்த்​த​வாடா மாவட்ட பாஜக தலை​வ​ர் சேஷ்​ராவ் யாதவ்

Updated on
1 min read

புதுடெல்லி: ம.பி.​யின் சிந்த்​த​வாடா மாவட்ட பாஜக தலை​வ​ராக இருப்​பவர் சேஷ்​ராவ் யாதவ். இவர், அவ்​வப்​போது சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி ஆளும் பாஜக​வுக்கு சங்​கடத்தை ஏற்​படுத்தி வரு​கிறார். இந்த வகை​யில், அவர் மீண்​டும் ஒரு சர்ச்சை கருத்தை கூறி​யுள்​ளார்.

சிந்த்​த​வாடா மாவட்​டத்​தின் பால் எனும் சமூகத்​தினரின் நிகழ்ச்​சி​யில் சேஷ்​ராவ் யாதவ் கலந்து கொண்​டார். இதில் அவர் பேசுகை​யில், ”பண்​டிதர்​கள் அரசு அதி​காரத்​தை​யும் தங்​களு​டன் வைத்​திருக்க விரும்​பு​கின்​றனர். அரசு நிர்​வாகப் பணிக்கு பிற சமூகத்​தினர் உள்​ளனர். பண்​டிதர்​கள் வழி​பாட்​டுக்​கான பூஜை, சடங்​கு​கள் செய்​வது மற்​றும் அறிவை போதிப்​பதுடன் நிறுத்​திக் கொள்ள வேண்​டும். ஆட்சி செய்​யும் உரிமை மற்​றவர்​களுக்கே சொந்​த​மானது” என்று சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​னார்.

அப்​போது மேடை​யில் சிந்த்​வாடா தொகுதி பாஜக எம்​.பி. பண்டி என்​கிற விவேக் சாஹு​வும் இருந்​தார். பிராமண​ரான விவேக் சாஹு முன்​னிலை​யில் அவர் இவ்​வாறு பேசி​யது மேலும் உணர்​வுப்​பூர்​வ​மாக்​கியது. நிகழ்ச்​சிக்​குப் பிறகு, அவரது பேச்சு சமூக ஊடகங்​களில் வைரலாகி வரு​கிறது. இதைக் கேட்டு பிராமண சமூகத்​தினரும் அவர்​களது சங்​கத்​தினரும் கடும் கோபம் அடைந்து போராட்​டங்​களில் இறங்கி உள்​ளனர்.

இது குறித்து ம.பி.​யின் பல்​வேறு பிராமண சமூக நிர்வாகிகள் கூட்டாக நடத்​தி​யப் போராட்​டத்​தில், “சேஷ்​ரா​வின் கருத்து அவமானகர​மானது. அவர் பேசி​யது ஒரு மரி​யாதைக்​குரிய சமூகத்தை இழி​வுபடுத்​தும் முயற்​சி. சமூக நல்​லிணக்​கத்​திற்கு தீங்கு விளை​வித்​து, சமூகங்​களுக்கு இடையே மோதலை உருவாக்கும் செயல். இதற்​காக, சேஷ்​ராவ் யாதவ் பகிரங்​க​மாக மன்​னிப்பு கேட்க வேண்​டும். இந்த விஷ​யத்​தில் பாஜக தலைமை அவர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளனர்.

சேஷ்​ராவ் யாதவ் இதற்கு முன் பேசிய ஒரு சர்ச்சை கருத்​துக்கு அவர், மாநில பாஜக தலை​வர் மற்​றும் மாநில பொதுச் செயலாளரால்​ கண்​டிக்​கப்​பட்​டார்​.

<div class="paragraphs"><p>ம.பி சிந்த்​த​வாடா மாவட்ட பாஜக தலை​வ​ர் சேஷ்​ராவ் யாதவ்</p></div>
மாமூல் தர மறுத்த பெண்ணை கைது செய்ய வைத்த விவகாரம்: தனிப்படை போலீஸார் 3 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in