கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: மகாராஷ்டிர விமான விபத்து விசாரணை நிலவரம் என்ன?

கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: மகாராஷ்டிர விமான விபத்து விசாரணை நிலவரம் என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: மகா​ராஷ்டி​ரா​வில் நடை​பெற்ற விமான விபத்​தில் துணை முதல்​வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த விபத்​துக்​கான காரணத்தை கண்​டறிய மத்​திய விமான போக்கு​வரத்து துறை உயர்​நிலை விசா​ரணை நடத்த வேண்​டும். எதிர்​காலத்​தில் இது​போன்ற விபத்​துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்னாவிஸ், மத்​திய விமான போக்​கு​வரத்து துறைக்கு கடிதம் அனுப்பி​னார்.

இந்த கடிதத்​துக்கு பதில் அளித்து முதல்​வர் பட்​னா​விஸுக்கு மத்திய விமான போக்​கு​வரத்து துறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு நேற்று அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ”விமான விபத்து தொடர்​பாக மத்​திய விமான போக்​கு​வரத்து துறை​யின் கீழ் இயங்​கும் விமான விபத்து புல​னாய்வு பிரிவு (ஏஏஐபி) ஏற்கெனவே விசா​ரணையை தொடங்​கி​விட்​டது. ஏஏஐபி மற்​றும் டிஜிசிஏ புல​னாய்வு குழுக்​கள் விமான விபத்து நேரிட்ட இடத்​தில் ஆய்வு நடத்தி உள்​ளன. கருப்பு பெட்டி மீட்​கப்​பட்டு ஆய்​வுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளது.

விமான விபத்து தொடர்​பாக வெளிப்​படைத்​தன்​மை​யுடன் விசாரணை நடத்​தப்​படும். தொழில்​நுட்ப தரவு​கள், விமானத்​தின் இயக்​கம், விபத்து நேரிட்ட பகுதி என அனைத்து கோணங்​களி​லும் விசா​ரணை நடத்​தப்​படும். எதிர்​காலத்​தில் இது​போன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்​திருக்​கிறது. இதை கவனமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்​கப்​படும்.

ஒத்துழைப்பு தேவை: விமான விபத்து குறித்து விரை​வாக விசாரணை நடத்த மகா​ராஷ்டிர மாநில அரசின் ஒத்​துழைப்பு மிகவும் அவசி​யம். குறிப்​பாக உள்​ளூர் நிர்​வாகம், எங்களது புலனாய்வு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: மகா​ராஷ்டிரா முன்​னாள் முதல்​வர் அஜித் பவார் பயணம் செய்த லியர்​ஜெட் 45 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமான விபத்து புல​னாய்வு அலு​வல​கம் (ஏஏஐபி) விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது.

விசா​ரணை விரை​வாக நடை​பெறு​வ​தாக​வும், விமானத்​தின் கருப்பு பெட்டி மீட்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் விமான போக்​கு​வரத்து அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இதில் உள்ள தகவல்​கள் வெளி​யான பின்​பு, விமான விபத்​துக்​கான காரணம் தெரிய​வரும்.

விமான விபத்து விசா​ரணைக்​காக டெல்லி மற்​றும் மும்​பையி​ல் இருந்து சென்ற ஏஏஐபி அதி​காரி​கள் விபத்து நடத்த இடத்​தில்​ ஆய்வு மேற்​கொண்​டனர்​.

கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: மகாராஷ்டிர விமான விபத்து விசாரணை நிலவரம் என்ன?
மறைந்த அஜித் பவார் மீதான வழக்குகளை ரத்து செய்வதே உண்மையான அஞ்சலி: எம்.பி.சஞ்சய் ராவத் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in