திரிணமூல் எம்.பி.கோயல் மல்லிக் ராஜினாமா - மம்தா பானர்ஜிக்கு மற்றொரு பின்னடைவு

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கோயல் மல்லிக்

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கோயல் மல்லிக்

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்ஜிக்கு மற்​றொரு பின்​னடை​வாக, அவரது கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி. கோயல் மல்​லிக் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.

கோயல் மல்​லிக் என்று பிரபல​மாக அறியப்​படும் ருக்​மணி மல்லிக், பெங்​காலி திரைப்பட நடிகை ஆவார். இவர், திரிண​மூல் சார்​பில் இந்த ஆண்டு ஏப்​ரல் 6ம் தேதி மாநிலங்​களவை எம்.பி.யாக பதவி​யேற்​றார். ஆனால் பதவி​யேற்ற 3 மாதங்களிலேயே அவர் பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார்.

இது குறித்து மாநிலங்​களவை தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணனுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதத்​தில், "மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியி​லிருந்து வில​கு​கிறேன். இதை உடனடி​யாக அமலுக்கு வரும் வகை​யில் ஏற்​றுக்​கொள்ள வேண்​டு​கிறேன்" என்று கூறி​யுள்​ளார். பதவி வில​கியதற்​கான காரணம் குறித்து கோயல் மல்​லிக் இது​வரை எந்த விளக்​க​மும் அளிக்​க​வில்​லை.

அண்​மை​யில் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று முதல் ​முறை​யாக ஆட்​சியை கைப்பற்​றியது. ஆளும் கட்​சி​யாக இருந்த திரிண​மூல் காங்​கிரஸ் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்​வியை தொடர்ந்து திரிண​மூல் கட்சி அரசி​யல் நெருக்​கடிகளை எதிர்​கொண்டு வரு​கிறது. இதில் புதிய பின்​னடை​வாக கோயல் மல்லிக்கின் ராஜி​னாமா அமைந்துள்​ளது.

முன்​ன​தாக, திரிண​மூல் காங்கிரஸ் எம்​எல்ஏ மதன் மித்ரா சட்டப்பேரவை அதிருப்​தி​யாளர் அணி​யில் இணைந்​தார். கட்சியின் பொதுச்செய​லா​ளர் அபிஷேக் பானர்​ஜியை முன்னிறுத்து​வ​திலேயே கட்சி கவனம் செலுத்​து​வ​தாக அவர் குற்றம்சாட்​டி​யிருந்​தார். என்​றாலும் ஊழல் வழக்​கில் மதன் மித்ராவின் மனைவி மற்​றும் இரண்டு மகன்​களுக்கு அமலாக்கத்துறை சம்​மன் அனுப்​பிய அடுத்த நாளே மித்ரா இந்த முடிவை அறிவித்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p><em>எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கோயல் மல்லிக்</em></p></div>
உ.பி.யில் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in