

கொல்கத்தா: வங்கதேசத்தின் தென் மேற்கு பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று பிற்பகல் 1.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்தது.
இதனால், வங்கதேசத்தின் அருகில் உள்ள மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.