இறுதி வாக்காளர் பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் டிஎம்சி முறையிடும்: மம்தா

இறுதி வாக்காளர் பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் டிஎம்சி முறையிடும்: மம்தா
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது (எஸ்ஐஆர்) 91 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீக்கப்பட்டவர்களில் விண்ணப்பித்த 60 லட்சம் மனுக்களை மாவட்ட நீதிபதிகள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. இந்த பரிசீலனையில் 32 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. 27 லட்சம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, "இறுதி வாக்காளர் பட்டியலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) மேல்முறையீடு செய்யும். பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்ட 27 லட்சம் பேருக்கும் தேர்தலுக்கு முன்பாக வாக்குரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்" என்றார்.

இறுதி வாக்காளர் பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் டிஎம்சி முறையிடும்: மம்தா
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in