மதம் மாற வற்புறுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை

மதம் மாற வற்புறுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை
Updated on
1 min read

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்​கி​நாடா பஞ்​சா​யத்து ராஜ் துறை​யில் உதவிப் பொறி​யாள​ராக பணி​யாற்றி வந்த நூக​ராஜ், அவரது மனைவி மீனா, மகள் சவுஜன்​யா, பேரன் ரியான்ஸ் ஆகிய 4 பேரும் கடந்த 16-ம் தேதி நள்​ளிர​வில் காக்​கி​நாடா கோதாவரி நதி​யில் குதித்​தனர். இதில், ரியான்ஸ் மட்​டுமே கரை ஒதுங்கி உயிர் பிழைத்த நிலை​யில் மற்ற மூவரும் பரி​தாப​மாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக 2 கடிதங்​கள் போலீ​ஸாருக்கு கிடைத்​தன. இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: ரியான்​ஸுக்கு துப்​பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்த சாதிக் கான் என்​பவர், கணவர் இல்லாத சவுஜன்​யா​வுடன் தகாத முறை​யில் நடந்​துள்​ளார்.

மேலும், சவுஜன்​யாவை தன்​னுடைய மதத்​துக்கு மாறும்​படி அடிக்​கடி வலி​யுறுத்தி உள்​ளார். இல்​லை​யெனில் ரியான்ஸை கடத்​திக் கொலை செய்​து​விடு​வேன் என மிரட்டி உள்​ளார்.

இதனால் குடும்​பத்​துடன் தற்​கொலை செய்து கொள்ள முடிவு செய்​தனர். அதன்​படி கடந்த 16-ம் தேதி கோதாவரி நதி​யில் 4 பேரும் குதித்​தனர். இதில் ரியான்ஸ் உயிர் தப்​பி​னார். இதனை அறிந்​ததும் தலைமறை​வா​க இருந்த சாதிக் கானை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்​வாறு போலீ​ஸார்​ கூறினர்​.

மதம் மாற வற்புறுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை
ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு 6 மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in