டாக்காவில் இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல்: வங்கதேச தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்

டாக்காவில் இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல்: வங்கதேச தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய தூதரகத்​துக்கு பாது​காப்பு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளதையடுத்​து, வங்​கதேச தூதரை அழைத்து மத்​திய அரசு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

வங்​கதேசத்​தில் புதி​தாக தொடங்​கப்​பட்ட தேசிய குடிமக்​கள் கட்​சி​யின் (என்​சிபி) மூத்த தலை​வர் ஹஸ்​னத் அப்​துல்​லா, இந்​தி​யா​வின் 7 சகோ​தரி​களை (வடகிழக்கு மாநிலங்​கள்) வங்​கதேசத்​துடன் இணைப்​போம் என இரு தினங்​களுக்கு முன்பு கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், வங்​கதேச தலைநகர் டாக்​கா​வில் உள்ள இந்​திய தூதரகத்​துக்கு பாது​காப்பு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும் வகை​யில் சில தீவிர​வாத அமைப்​பு​கள் மிரட்​டல் விடுத்​துள்​ளன.

இதையடுத்​து, டெல்​லி​யில் உள்ள வங்​கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்​லா​வுக்கு நேரில் வரு​மாறு சம்​மன் அனுப்​பப்​பட்​டது. நேரில் ஆஜரான அவரிடம் டாக்​கா​வில் உள்ள இந்​திய தூதரகத்​துக்கு ஏற்​பட்​டுள்ள பாது​காப்பு அச்​சுறுத்​தல் குறித்து கவலை தெரி​வித்​ததுடன் கண்​டன​மும் தெரிவிக்​கப்​பட்​டது.

வங்​கதேசத்​தில் உள்ள இந்​திய தூதரகம் மற்​றும் அலு​வல​கங்​களின் பாது​காப்பை இடைக்​கால அரசு உறுதி செய்​யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்காவில் உள்ள இந்தியா விசா மையத்தை மத்திய அரசு நேற்று மூடியது.

டாக்காவில் இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல்: வங்கதேச தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in