அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங்

மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங்

Updated on
1 min read

புதுடெல்லி: அணுசக்தி துறையில் தனி​யார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது.

அணுசக்தி துறை மத்​திய அரசின் முழு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. நாட்​டில் அணு மின்​சார உற்​பத்​தியை அதி​கரிக்​கும் நோக்​கில், இத்​துறையில் தனி​யாருக்கு அனுமதி வழங்க மத்​திய அரசு முடிவு செய்​து உள்​ளது.

இதற்​காக ‘இந்​தி​யா​வின் மாற்​றத்​துக்​கான அணுசக்தி மேம்​பாட்டு (சாந்​தி) மசோதா தயாரிக்​கப்​பட்​டது. இதை அணு சக்தி துறைக்கு பொறுப்பு வகிக்​கும் மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங், மக்களவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். அப்​போது அவர் பேசியதாவது:

நாம் 2047-ம் ஆண்​டுக்​குள் 100 ஜிகா வாட் அணு மின்​சக்தி உற்​பத்தி என்ற இலக்கை எட்ட வேண்​டும். அதற்​கு, இப்​போது கொண்​டு​வரப்​படும் அணுசக்தி மசோதா உதவும்.

அரசின் முழு கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் அணு சக்தி துறையை, தனி​யார் நிறு​வனங்​களுக்கு திறந்​து​விட இந்த மசோதா வழி​வகுக்​கும் என்​ப​தால் இது மிக முக்​கிய​மான மசோ​தா. நாட்​டின் வளர்ச்சி பயணத்​துக்​கு, இது புதிய வழியை காட்​டும்.

நாட்​டில் அதி​கரித்து வரும் எரிசக்தி தேவை​களுக்கு தீர்வு காண​வும், மொத்த எரிசக்​தி​யில், அணு மின்​சா​ரத்​தின் பங்கை 10 சதவீத​மாக அதி​கரிக்​க​வும் இந்த மசோதா அவசி​யம்.இவ்​வாறு அமைச்​சர் ஜிதேந்​திர சிங் பேசி​னார்.

இந்த மசோ​தாவை எதிர்த்து காங்​கிரஸ் எம்​.பி மணீஷ் திவாரி பேசுகையில், ‘‘இந்த மசோ​தா​வில் அணுசக்தி சாதனங்​களை விநி​யோகிக்​கும் நிறு​வனங்​களின் பொறுப்பை நீக்​கும் பிரிவு உள்​ளது. இந்​தப் பிரிவு, அணு உலை விபத்து ஏற்​பட்​டால் இந்​தி​யா​வுக்கு பாதக​மாக அமை​யும். கதிர்​வீச்சு கழி​வு​களை கையாள்​வது, யுரேனி​யம் அணு உலைகளுக்கு முன்​னுரிமை அளிப்​பது போன்ற திட்​டங்​கள் எது​வும் இந்த மசோ​தா​வில்​ இல்​லை’’ என்றார். இதையடுத்து இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.​

<div class="paragraphs"><p>மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங்</p></div>
மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் நிர்​மலா சீதா​ராமன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in