

ஸ்ரீஹரிகோட்டா: சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. இதில் 3ம் கட்ட இயந்திரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
திட எரிபொருளில் இயங்கும் இந்த இயந்திரம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த திட எரிபொருள் இயந்திரம் ராக்கெட்டுக்கு வினாடிக்கு 4 கி.மீ. வேகத்தை கொடுக்கும். சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. இதில் 3-ம் கட்ட இயந்திரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
திட எரிபொருளில் இயங்கும் இந்த இயந்திரம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த திட எரிபொருள் இயந்திரம் ராக்கெட்டுக்கு வினாடிக்கு 4 கி.மீ. வேகத்தை கொடுக்கும்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் திறம்பட செயல்படும் வகையில் இதன் 3ம் கட்ட இயந்திரத்தில் உள்ள இக்னைட்டர், கூம்பு குழாய்கள் ஆகியவற்றின் வடிவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 108 வினாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், மேம்படுத்தப்பட்ட 3-ம் கட்ட இயந்திரம் ராக்கெட்டில் பொருத்த தகுதி பெற்றுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் கடந்தாண்டு ஜூலை மாதம் திட எரிபொருள் இயந்திரம் தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டது. உள்நாட்டு தொழில் நுட்பம் மூலம் 10 டன் எடையுள்ள திட எரிபொருள் கலவை இயந்திரம் சதீ்ஷ் தவான் விண்வெளி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகின் பெரிய திட எரிபொருள் கலவை இயந்திரமாகும்.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அமைந்துள்ள திட எரிபொருள் இயந்திர தயாரிப்பு மையம் மற்றும் பரிசோதனை மையம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல்முறையாக ஏவவுள்ள முதல் ராக்கெட்டின் திட எரிபொருள் மோட்டார் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.