அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை

பாழடைந்த இடத்துக்கு வரவழைத்து மர்ம நபர்கள் துணிகரம்
அன்​ஷுல் குஞ்சா

அன்​ஷுல் குஞ்சா

Updated on
2 min read

ஹைதராபாத்: அமெரிக்​கா​வின் பிலடெல்​பியா நகரில் 28 வயது தெலங்​கானா இளைஞர் மர்ம நபர்​களால் சுட்​டுக் ​கொல்லப்பட்டார்.

தெலங்​கா​னா​வின் மேட்​சல் மல்​காஜ்கிரி மாவட்​டம் குண்ட்​ல​போச்​சம்​பள்​ளியை சேர்ந்​தவர் அன்​ஷுல் குஞ்சா (28). அமெரிக்​கா​வின் பென்​சில்​வேனியா மாகாணம். பிலடெல்​பி​யா​வில் பன்​னாட்டு நிறு​வனம் ஒன்​றில் வேலை பார்த்து வந்​தார். அவர் கூடு​தல் வருமானத்​துக்​காக வார இறுதி நாட்​களில் பீட்சா டெலிவரி செய்யும் பணியை செய்து வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை நள்​ளிரவு 12:30 மணியளவில் வடக்கு பிலடெல்​பி​யா​வில் ஆள் நடமாட்​ட​மில்​லாத ஒரு இடத்​துக்கு பீட்சா டெலிவரி செய்​யச் சென்​றுள்​ளார். அப்போது அவரை மர்ம நபர்​கள் சுட்​டுக் கொன்றனர்.

இது தொடர்பாக பிலடெல்​பியா காவல்​துறை தலைமை ஆய்வாளர் ஸ்காட் ஸ்மால் கூறுகை​யில், “சம்பவ இடத்​திலிருந்து 3 தோட்​டாக்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. மிக அரு​கில் இருந்து அன்ஷுல் சுடப்​பட்​டதை இது காட்​டு​கிறது. அன்​ஷுல் தனது வாகனத்​தில் இருந்து இறங்​கிச் சென்​ற ​போது கருப்பு ஆடை அணிந்த இரு​வர் அவரைப் பின்​ தொடர்​வதை கண்​காணிப்பு கேமரா பதிவு காட்​டு​கிறது. அன்​ஷுலிடம் இருந்து எது​வும் திருடப்பட​வில்​லை” என்​றார்.

இந்த சம்​பவம் தொடர்​பாக தெலங்​கா​னா​வில் இருக்​கும் அன்​ஷுலின் சகோ​தரி தன்வி கூறுகை​யில், “பாழடைந்த ஒரு இடத்​தில் பீட்சா டெலிவரி செய்​யு​மாறு அவருக்கு கூறப்​பட்​டுள்​ளது. திட்​ட மிட்டு அன்​ஷுல் அங்கு வரவழைக்​கப்​பட்டு கொல்​லப்​பட்​டுள்ளார். அவர்​களின் நோக்​கம் என்​னவென்று தெரிய​வில்​லை.

அன்​ஷுல் மிக​வும் அன்​பானவன். எப்​போதும் மகிழ்ச்​சி​யாக​வும் இருப்​பவன். அவன் அமெரிக்கா செல்ல எந்​தவொரு கட்​டாய காரண​மும் இல்​லை. ஆனாலும் நாங்​கள் அனுப்பி வைத்​தோம். எனவே நீங்​கள் உங்​கள் குழந்​தைகளை அமெரிக்கா​வுக்கு அனுப்ப வேண்​டாம்” என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுத்​தார்.

மேலும் "அன்​ஷுலின் உடலை விரை​வில் இந்​தியா கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்​டும். எனது சகோ​தரனின் மரணத்​திற்கு நீதி கிடைக்க வேண்​டும். யார் மீதும் எங்​களுக்கு சந்​தேகம் இல்லை என்​றாலும், இதற்கு காரண​மானவர்​களைக் கண்​டறிந்து தண்​டிக்க வேண்​டும். இதற்கு முன் அன்​ஷுலின் சங்​கி​லி, போன் மற்​றும் பணம் அங்கு திருடப்​பட்​டன. ஆனால் உயிருக்கு ஆபத்தான தாக்​குதலை அவன் எதிர்​கொண்​ட​தில்​லை" என்​றார்.

இதற்​கிடை​யில் கொலை தொடர்​பாக தகவல் கொடுப்பவர்களுக்கு பிலடெல்​பியா போலீ​ஸார் 20,000 டாலர் வெகுமதி அறி​வித்​துள்​ளனர். இது​வரை யாரும் கைது செய்யப்படவில்​லை. ஆர்​டர் செய்த நபரின் தொலைபேசி எண் உள்​ளது. அவருக்கு கொலை​யில் தொடர்​புள்​ளதா என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தூதரகத்​தின் பதில்: "இதற்​கிடை​யில் நியூ​யார்க்​கில் உள்ள இந்திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், “பிலடெல்​பி​யா​வில் இந்​திய இளைஞர் அன்​ஷுல் குஞ்சா இறந்த செய்தி எங்​களை மிகுந்த வேதனை அடையச் செய்​துள்​ளது. இந்த துயர​மான தருணத்​தில் அவரது குடும்​பத்​தினருக்கு எங்​களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அன்​ஷுலின் குடும்​பத்​தினருடன் தூதரகம் தொடர்​பில் உள்​ளது. அவர்​களுக்கு தேவை​யான அனைத்து உதவிகளை​யும்​ வழங்​கி வருகிறது" என்​று கூறப்பட்டுள்​ளது.

<div class="paragraphs"><p><em>அன்​ஷுல் குஞ்சா</em></p></div>
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in