இங்கிலாந்தில் இருந்தவாறு உ.பி.யில் ஊதியம் பெற்ற ஆசிரியர்

இங்கிலாந்தில் இருந்தவாறு உ.பி.யில் ஊதியம் பெற்ற ஆசிரியர்
Updated on
1 min read

லக்னோ: உ.பி.​யின் ஆசம்​கரை சேர்ந்தவர் மவுலானா சம்​சுல் ஹூடா கான். அரசு உதவி பெறும் மதரசா ஒன்​றில் உதவி ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். தொடர்ந்து மருத்​துவ விடுப்பு எடுத்​தும், சர்​வீஸ் ஆவணங்​களை புதுப்​பித்​தும் வந்த இவர், இறு​தி​யில் 2017-ல் முழுப் பலன்​களு​டன் விருப்ப ஓய்வு பெற்​றார்.

ஆனால், ஹுடா 2007-ல் இங்​கிலாந்​தில் குடியேறி 2013-ல் அந்​நாட்டு குடி​யுரிமை பெற்​றுள்​ளார். அவர் உ.பி.​யில் பணி​யில் இல்​லாத​போதும் ஓய்​வூ​தி​யப் பலன்​கள் தவிர, 10 ஆண்​டு​களாக சம்​பளம் பெற்​றுள்​ளார். இது தொடர்​பாக அவருக்கு உதவிய சிறு​பான்​மை​யினர் நலத்​துறை​யின் 4 மூத்த அதி​காரி​களை உ.பி. அரசு கடந்த நவம்​பர் 22-ம் தேதி சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

இதுதொடர்பாக அமலாக்க துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்​தான் மத அமைப்​பு​களு​டன் ஹுடா கானுக்கு தொடர்பு இருப்​பது, அவர் ரூ.33 கோடி சொத்​துகள் குவித்​திருப்​பது மற்​றும் சந்​தேகத்​திற்​குரிய நிறு​வனங்​களிடம் இருந்து அவரது வங்​கிக் கணக்​குக்கு ரூ.5 கோடி வந்​திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் மீது சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. அவரது வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் வெளி​நாட்டு முதலீடு​களை ஆய்வு செய்து வரு​கிறது.

இங்கிலாந்தில் இருந்தவாறு உ.பி.யில் ஊதியம் பெற்ற ஆசிரியர்
உ.பி.யில் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in