மிகப்பெரிய ஏஐ தரவு மையம் அமைக்கிறது டிசிஎஸ்

மிகப்பெரிய ஏஐ தரவு மையம் அமைக்கிறது டிசிஎஸ்
Updated on
1 min read

மும்பை: இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது.

வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது.

தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது. இது வரும் 2030-க்குள் 10 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய ஏஐ தரவு மையம் அமைக்கிறது டிசிஎஸ்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் நினைவிடங்களை தகர்த்து வரும் சிஆர்பிஎப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in