மே.வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்
மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்குவங்க முதல்வராக தேர்வாகி உள்ள சுவேந்து அதிகாரி

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்குவங்க முதல்வராக தேர்வாகி உள்ள சுவேந்து அதிகாரி

Updated on
2 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க மாநிலத்தில் சுவேந்து அதி​காரி இன்று காலை முதல்​வ​ராகப் பதவி​யேற்​கிறார்.

மேற்​கு​வங்​கத்​தில் கடந்த ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பதி​வான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டன. முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 293 தொகு​தி​களில் பாஜக 207 இடங்​களில் வெற்றி பெற்று ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் மட்​டுமே கிடைத்​தன.

இதைத் தொடர்ந்து பாஜக எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மேலிட பார்​வை​யாள​ராக பங்​கேற்​றார். இந்த கூட்​டத்​தில் கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அரசு பதவி​யேற்பு விழா நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னிலை​யில் மேற்​கு​வங்​கத்​தின் புதிய முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவி​யேற்க உள்​ளார். இந்த விழா​வில் மத்​திய அமைச்​சர்​கள், பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள், பாஜக மூத்த தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

மத்​திய அமைச்​சர் அமித் ஷா கொல்​கத்​தா​வில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: கடந்த மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் மம்தா பானர்​ஜியை, சுவேந்து அதி​காரி தோற்​கடித்​தார். தற்​போது பவானிபூர் தொகு​தி​யில் மம்​தாவை அவர் தோற்​கடித்​திருக்​கிறார். பாஜக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த பவானிபூர் மக்​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்கு திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​படு​கிறது. கடந்த 1967-ம் ஆண்​டுக்​குப் பிறகு தமிழகத்​தில் காங்​கிரஸால் ஆட்சி அமைக்க முடிய​வில்​லை. அந்த மாநிலத்​தில் வாக்கு திருட்டு நடை​பெறுகிற​தா?

கடந்த 42 ஆண்​டு​களாக சிக்​கிமில் காங்​கிரஸ் முதல்​வர் இல்​லை. கடந்த 36 ஆண்​டு​களாக பிஹாரில் காங்​கிரஸ் முதல்​வர் பதவியேற்க முடிய​வில்​லை. குஜ​ராத்​தில் 30 ஆண்​டு​கள், ஒடி​சாவில் 26 ஆண்​டு​கள், நாகாலாந்​தில் 23 ஆண்​டு​கள், மகாராஷ்டிரா​வில் 12 ஆண்​டு​கள் வரை காங்​கிரஸ் புறக்கணிக்கப்​பட்டு உள்​ளது

மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி கடந்த 2014-ம் ஆண்​டில்​தான் ஆட்சி அமைத்​தது. அதற்கு முன்​பிருந்தே பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் தோல்​வியைத் தழுவி வரு​கிறது. ராகுல் காந்தி தலை​மையி​லான காங்​கிரஸ் தொடர்ந்து பின்​னோக்கி செல்​கிறது. அவரது தலை​மை​யால் தற்​போது இண்​டியா கூட்​ட​ணி​யும் உடைந்​திருக்​கிறது. தேர்​தல் தோல்வி​கள் குறித்து காங்​கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்​வது அவசி​யம்.

ஒரு காலத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வை​யில் பாஜக​வுக்கு 3 எம்எல்​ஏக்​கள் மட்​டுமே இருந்​தனர். இந்த எண்​ணிக்கை கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் 77 எம்​எல்​ஏக்​களாக உயர்ந்​தது. தற்போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 207 பாஜக எம்​எல்​ஏக்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு உள்​ளனர். 9 மாவட்​டங்​களில் திரிண​மூல் காங்​கிரஸுக்கு ஒரு தொகு​தி​கூட கிடைக்​க​வில்​லை.

இனிமேல் மேற்​கு​வங்​கத்​துக்​குள் ஊடுரு​வல்​காரர்​கள் நுழைய முடி​யாது. இங்​குள்ள ஊடுரு​வல்​காரர்​கள் வெளி​யேற்​றப்​படு​வார்​கள். அடுத்த சில மாதங்​களில் சமூக​விரோத கும்​பல்​கள் ஒழிக்​கப்​படும். மாநிலத்​தின் சட்​டம், ஒழுங்கு சீரடை​யும். இரட்டை இன்​ஜின் ஆட்​சி​யால் மேற்​கு​வங்​கம் அதிவேக​மாக முன்​னேறும்.

இது​வரை 20 மாநிலங்​களில் பாஜக மற்​றும் பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. தற்​போது 21-வது மாநில​மாக மேற்​கு​வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமை​கிறது. இதற்​காக ஒட்​டுமொத்த மேற்​கு​வங்க மக்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அமித் ஷா பேசி​னார்.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்குவங்க முதல்வராக தேர்வாகி உள்ள சுவேந்து அதிகாரி</p></div>
மன்னார்குடி அமமுக எம்எல்ஏ கடத்தல்? - குதிரைபேரம் நடப்பதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in