வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்ட கூடாது: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​​வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்த சிறப்பு பணி​களில்​ (எஸ்​ஐஆர்) ஒத்​துழைக்​காத மாநிலங்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் கடும் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. மேலும், இந்​தச் சூழ்​நிலையை சிறப்​பாக கையாள வேண்​டும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்​கும் உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழ்​நாடு, உத்தர பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்​கம் உட்பட 11 மாநிலங்​களில் எஸ்​ஐஆர் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​கள்​(பிஎல்ஓ) மிரட்​டப்​படு​வ​தாக புகார் எழுந்​துள்​ளது. மேற்கு வங்​கத்​தின் சில பகு​தி​களில் உள்​ளூர் அரசி​யல்​வா​தி​கள் அல்​லது நிர்​வாகத்​தின் ஒத்​துழை​யாமை காரண​மாக எஸ்​ஐஆர் பணி​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்​டுள்ள வழக்கு நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பாக்சி ஆகியோர் அடங்​கிய அமர்​வின் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது: எஸ்​ஐஆர் பணி​களுக்கு ஒத்​துழை​யாமை, பிஎல்​ஓக்​கள் பணியை மேற்​கொள்​ள​வி​டா​மல் தடுக்​கப்​படு​வது போன்​றவை குறித்து எங்​கள் கவனத்​துக்கு தேர்​தல் ஆணை​யம் கொண்டு வரவேண்​டும். அது​போன்ற சந்​தர்ப்​பத்​தில் நாங்​கள் உரிய ஆணை​களைப் பிறப்​பிக்​கிறோம்.

எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்கு மாநில அளவில் எதிர்ப்பு அதி​கரிக்​கும் போக்​கைத் தீவிர​மாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும். வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களில் மாநில அரசுகள் முழு​மை​யாக ஒத்​துழைக்க வேண்​டும். அப்​படி இல்​லாத மாநிலங்​கள் குறித்து தேர்​தல் ஆணை​யம் நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்​குக் கொண்டு வந்​தால் தகுந்த உத்​தரவை நாங்​கள் பிறப்​பிப்​போம். இவ்​வாறு நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

நீதிபதி ஜோய்​மால்யா பாக்சி கூறும்​போது, ‘‘எஸ்​ஐஆர் பணி​கள் என்​பது அலு​வலக மேஜை​யில் அமர்ந்​து​கொண்டு அதி​காரி​கள் பணி​யாற்​று​வது போன்றது அல்ல. ஒவ்​வொரு வீடாகச் சென்று வாக்​காளர்​கள் குறித்த விவரங்​களை பிஎல்​ஓக்​கள் சேகரிக்​க வேண்​டும். அதனால் அவர்​களுக்கு கூடு​தல் பணிச்​சுமை, மன அழுத்​தம் ஏற்​படு​கிறது. எனவே, பிஎல்​ஓக்​களை பணி செய்​வதை யாரும் தடுக்​கக்​கூ​டாது.

எஸ்​ஐஆர் பணி​கள் அடிப்​படை நிலை​யில் எந்​த​விதத் தொந்​தர​வும் இல்​லாமல் நடை​பெற வேண்​டும். இதை மாநில அரசுகள் உறுதி செய்​ய​ வேண்​டும். இந்​தப் பணி​களுக்கு எந்​த​விதத் தடை​யும் வரக்​கூ​டாது. பிஎல்​ஓக்​களுக்கு மிரட்​டல் விடுப்​பது தொடர்​பாக எங்​களின் கவனத்​துக்​குக்​ கொண்​டு வந்​​தால்​ தகுந்​த உத்​தர​வைப்​ பிறப்​பிப்​போம்​. மேலும்​, சூழ்​நிலையை சிறந்​த முறை​யில்​ தலை​மைத்​ தேர்​தல்​ ஆணை​யம்​ கை​யாள வேண்​டும்​” என்​றார்​.

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
சட்டங்களும் விதிமுறைகளும் மக்களை துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in