நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் திருப்பம்: அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள்

விடுதலையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் திருப்பம்: அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள்
Updated on
2 min read

புதுடெல்லி: நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பையா கொலை வழக்​கில், தண்​டனை விதிக்​கப்​பட்ட 9 பேரை​யும் விடு​தலை செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் மிகப்​பெரிய தவறிழைத்​துள்​ளது. அவர்​கள் அனை​வருக்​கும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

பிரபல நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பை​யா, கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் இருந்த நிலப்​பிரச்​சினை தொடர்​பாக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் கடந்த 2013-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் அரசு பள்ளி ஆசிரியர் பொன்​னுச்​சாமி, அவரது மகன்​கள் வழக்​கறிஞர் பாசில், பொறி​யாளர் போரிஸ் மற்​றும் வில்​லி​யம், மருத்​து​வர் ஜேம்ஸ் சதீஷ்கு​மார், பொறி​யாளர் முரு​கன், செல்​வபிர​காஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்​டனை​யும், பொன்​னுச்​சாமி​யின் மனைவி மேரி புஷ்பம் மற்​றும் கூலிப்​படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசு​ராஜன் ஆகியோ​ருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும் விதித்து சென்னை அமர்வு நீதி​மன்​றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தீர்ப்​பளித்​தது.

இந்த தண்​டனையை எதிர்த்து அனை​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். இதை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கடந்த 2024 ஜூன் 14 அன்று பிறப்​பித்த தீர்ப்​பில், ‘‘இந்​தக் கொலை வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேருக்​கும் எதி​ரான குற்​றச்​சாட்​டுக்​களைக் காவல் துறை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கத் தவறி விட்​டது’’ எனக் கூறி மரண தண்​டனை விதிக்​கப்​பட்ட 7 பேர், ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட 2 பேர் என 9 பேருக்​கும் கீழமை நீதி​மன்​றம் விதித்த தண்​டனையை ரத்து செய்து உடனடி​யாக விடு​தலை செய்ய உத்​தர​விட்​டனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்​பிலும், கொலை செய்​யப்​பட்ட மருத்​து​வர் சுப்​பை​யா​வின் மனைவி சாந்தி தரப்​பிலும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், சதீஷ் சந்​திரசர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பிரபல நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பையா கொலை​யில், மேல்​முறை​யீட்டு வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் முறை​யாக விசா​ரிக்​கவில்​லை. சாட்​சி​யங்களை ஆய்வு செய்​யாமல் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் விடு​தலை செய்து மிகப்​பெரிய தவறிழைத்​துள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இத்​தகைய தீர்ப்பு கடும் அதிருப்தி அளிக்​கிறது.

பட்​டப்​பகலில் நடந்த இந்​தக் கொலை வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம், அதன் நோக்​கத்​தை​யும், பின்​னணி​யை​யும் ஆராய்ந்து சாட்​சி​யங்​கள் மற்​றும் ஆதா​ரங்​களைக் கவனத்​தில் கொண்​டு​தான் குற்​றம் சாட்​டப்​பட்ட 7 பேருக்கு மரண தண்​டனையை​யும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனையை​யும் விதித்​துள்​ளது.

அதைக் கூட உயர் நீதி​மன்​றம் முறை​யாக கவனத்​தில் கொள்​ளாதது துர​திருஷ்ட​வச​மானது. அனை​வரை​யும் கூண்​டோடு விடு​தலை செய்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பு சட்​டப்​படி ஏற்​புடையதல்ல. எனவே, அந்​தத் தீர்ப்பை நாங்​கள் ரத்து செய்​கிறோம். சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அனு​ம​தித்​தால் அது தவறான நடை​முறைக்கு வழி​வகுத்து விடும்.

மனிதனின் பேராசை எந்த எல்​லைக்​கும் செல்​லும் என்ற ரவீந்​திர​நாத் தாகூரின் வரி​களுக்கு இந்​தக் கொலை வழக்கு சிறந்த உதா​ரணம். தான் பெற்ற பிள்​ளை​களைப் பெற்​றோர் எப்​போதும் நேசிப்​பார்​கள். பாசத்​தின் மிகு​தி​யால் வயதான காலத்​தி​லும் அவர்​கள் செய்​யும் செயல்​கள் நல்​ல​தா, கெட்​டதா என்​பதை ஆரா​யாமல் அவர்​களை எதிர்த்து கேள்வி கேட்​பது இல்​லை. இந்த வழக்​கில் பொன்​னுச்​சாமி​யும், அவரது மனைவி மேரி புஷ்ப​மும் தங்​களது மகன்​களு​டன் இணைந்து சதியில் ஈடு​பட்​டுள்​ளனர். இதற்​காக அவர்​களின் குற்​றச்​செயல்​களை மன்​னிப்​ப​தாகக் கருத்​தில் கொள்​ளக் கூடாது. மனிதர்​களின் செயல்​பாடு​களைக் கோடிட்டு காட்​டு​கிறோம்.

ந்​தக் கொலை வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு விதிக்​கப்​பட்ட மரண தண்​டனை சரி​யானது​தான் என்​பதை நிரூபிக்​கும் வகை​யில் தமிழக அரசு அழுத்​தம் கொடுத்து வாதிட​வில்​லை. எனவே, அந்த 7 பேருக்​கும் விதிக்​கப்​பட்ட மரண தண்​டனையை நாங்​கள் ஆயுள் தண்​டனை​யாகக் குறைக்​கிறோம். அதே​நேரம் கீழமை நீதி​மன்​றம் விதித்த அபராதம் செல்​லும். பொன்​னுச்​சாமி​யும், அவருடைய மனைவி மேரி புஷ்ப​மும் தமிழக ஆளுநரிடம் மன்​னிப்பு கோரும் மனுவை தாக்​கல் செய்ய அனு​ம​திக்​கிறோம்.

அவர்​களின் மன்​னிப்பு மனுவை பரிசீலிக்​கும்​படி ஆளுநரை​யும் கேட்​டுக் கொள்​கிறோம். ஆளுநர் பரிசீலிக்​கும் வரை அவர்​களுக்கு வி​திக்​கப்​பட்ட தண்​டனையை நிறுத்தி வைக்​கிறோம். எனவே விடு​தலை​யாகி வெளியே உள்ள பொன்​னுச்​சாமி, மேரிபுஷ்பம் தவிர எஞ்​சிய 7 பேரும் 2 வாரங்​களில் வி​சா​ரணை நீதி​மன்​றத்​தில்​ சரணடைய வேண்​டும்​. இவ்​வாறு உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் திருப்பம்: அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள்
“அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்” - பெ.சண்முகம் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in