காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணை ஆக.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

புதுடெல்லி: ‘‘​கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்தரவின்​படி, தமிழகத்​துக்​குக் காவிரி​யில் தண்​ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்​நாடக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

காவிரி​யில் தமிழகத்​துக்கு உரிய தண்​ணீரைக் கர்​நாடக அரசு திறந்து விடக் கோரி​யும் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்​டும் என்ற உத்தரவை

எதிர்த்​தும் தமிழக அரசு தாக்​கல் செய்த மனு மற்​றும் திமுக தொடர்ந்த மனு ஆகியவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்.வைத்தி​ய​நாதன் ஆஜராகி, ‘‘கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வு​களைக் கர்​நாடக அரசு எப்​போதும் செயல்படுத்துவதில்லை. தற்​போது கர்​நாடக அணை​களில் 76 சதவீதம் அளவுக்குத் தண்​ணீர் இருப்பு இருந்​தும், தமிழகத்​துக்கு உரிய நீரை திறக்​காமல் இருப்​ப​தால் தமிழகம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

கர்​நாடக அரசு மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நில​வு​கிறது. காவிரி ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிந்​துரை​யின்படி காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் அனைத்​தும் பின்​பற்​றப்​பட்​டன. முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், அதை விட அதி​க​மான நீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டது. நேற்று காலை 8 மணி நில​வரப்​படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதி​க​மான அளவு தண்​ணீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘கர்​நாடகா சார்​பில் அதிகளவி​லான நீர் திறக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் எப்​படி தண்​ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்​கள்​?’’ என்று தமிழக அரசு வழக்​கறிஞரிடம் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘கட​வுள் அருளால் சமீபத்​தில் கபினி உள்​ளிட்ட பகு​தி​களில் மழை அதி​க​மாகப் பெய்​த​தால் கிடைத்த உபரி நீரை மட்​டுமே கர்​நாடகா திறந்​து​விட்​டுள்​ளது. ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் எதை​யும் கர்​நாடகா முறை​யாகச் செயல்​படுத்​த​வில்​லை’’ என்று சுட்​டிக்​காட்​டி​னார்.

மேலும், விகி​தாச்​சா​ரப்​படி முந்​தைய பற்​றாக்​குறை நீர் மற்​றும் ஆகஸ்ட் 31-க்​குள் தரவேண்​டிய நீர் என மொத்​தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்​நாடு பெறு​வதை நீதி​மன்​றம் உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார்.

அப்​போது நீதிப​தி​கள் கூறும்​போது, ‘‘கர்​நாட​கா​வில் தற்​போது மழை நில​வரம் நன்​றாக இருப்​ப​தால், இந்த வழக்கை ஒரு வாரத்​துக்​குப் பின்​னர் விசா​ரிக்​கலாம்’’ என்று கருத்து தெரி​வித்​தனர்.

இதையடுத்து நீதிப​தி​கள், “வழக்கு விசா​ரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்​துள்ள வி​னாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்​தரவை கட்​டா​யம்​ கர்​நாடக அரசு பின்​பற்​ற வேண்​டும்’’ என்​று உத்​தரவிட்​டனர்​.

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கிராம நத்தத்தில் வசிக்கும் 20 லட்சம் பேருக்குப் பட்டா: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in