ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. அப்​போது திடீரென அந்த அலுவலகத்​துக்​குள் முதல்​வர் மம்தா பானர்ஜி நுழைந்​தார். அங்கிருந்து ஆவணங்​கள், லேப் டாப் போன்​றவற்றை எடுத்​துக் கொண்டு சென்​றார். இது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கோரி அமலாக்கத் துறை தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் மிஷ்​ரா, என்​.​வி. அஞ்​சரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்த போது, மேற்கு வங்க அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, "மத்​திய அரசின் அமைப்​பான அமலாக்​கத் துறை போன்ற அமைப்​பு​கள் மாநில அரசுக்கு எதி​ராக ரிட் மனு தாக்​கல் செய்ய அனு​ம​திப்​பது கூட்​டாட்சி அமைப்​புக்கு ஆபத்​தாகி​விடும். இந்த விவ​காரத்​தில் அமலாக்​கத் துறைக்கு எந்த அடிப்​படை உரிமை​யும் இல்​லாமல் ரிட் மனு தாக்​கல் செய்ய முடி​யாது. இது சிபிஐ, போதை பொருள் தடுப்பு பிரிவு, வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகம் ஆகிவற்​றுக்​கும் பொருந்​தும்" என்று வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி பிர​சாந்த் குமார் மிஷ்ரா குறுக்​கிட்​டு, "இந்த விவ​காரத்​தில் உயர் நீதி​மன்​றத்​தி​லும் உச்ச நீதி​மன்​றத்​தி​லும் ரிட் மனு தாக்​கல் செய்ய முடி​யாது என்​றால் யார் தீர்வு காண்​பது ? மத்திய அரசின் விசா​ரணை அமைப்பு பணி​களை செய்​ய​வி​டா​மல் மாநில முதல்​வர் தடுப்​பது வழக்​கத்​துக்கு மாறானது. இன்​னொரு சந்​தர்ப்​பத்​தில் மற்​றொரு மாநிலத்​தின் முதல்​வர் அமலாக்கத்துறை சோதனையின்போது நுழைந்​தால் என்​ன​தான் தீர்​வு. தீர்வே இல்லாமல் அமலாக்கத்துறை செல்ல வேண்டுமா ?" என்று கேட்​டார். இதற்கு பதில் அளித்த மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான், அரசமைப்பு சாசனத்​தின் 300-வது பிரி​வின் கீழ் மத்​திய அரசு வழக்கு தொடர முடி​யும் என்று தெரி​வித்​தார்.

மேற்கு வங்க முதல்​வர் மம்தா சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, "மாநில அரசுகளுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை உயர் நீதி​மன்​றங்​களில் பதிவு செய்​துள்ள ரிட் மனுக்​களுக்கு எதிராக கேரளா, தமிழ்​நாடு அரசு தாக்​கல் செய்த மனுக்​களை மற்றொரு அமர்வு வி​சா​ரித்து வரு​கிறது" என்று வா​திட்​டார். இருதரப்பு வாதங்​களுக்கு பிறகு வி​சா​ரணையை உச்​ச நீதி​மன்​றம்​ மார்ச்​ 24ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளது.

ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in