மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் காங். வேட்பாளர் விலகல்: போட்டியின்றி தேர்வாகிறார் துணை முதல்வர்

மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் காங். வேட்பாளர் விலகல்: போட்டியின்றி தேர்வாகிறார் துணை முதல்வர்
Updated on
1 min read

பாராமதி: மகா​ராஷ்டிர முன்​னாள் துணை முதல்​வரும், தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின்​(என்​சிபி) மூத்த தலை​வரு​மாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்ற விமான விபத்​தில் மரணம் அடைந்​தார்.

இந்​நிலை​யில் கட்​சி​யில் குழப்​பங்​கள் ஏற்​படு​வதைத் தவிர்க்​க​வும், ஆட்​சி​யில் என்​சிபி கட்​சிக்​கான முக்​கி​யத்​து​வம் குறை​யாமல் இருக்​க​வும், அஜித் பவாரின் மனை​வி​யும், மாநிலங்​களவை எம்.பியு​மான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்​வர் பதவி வழங்கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அஜித் பவார் இறந்​த​தால் காலி​யாக இருந்த பாராமதி தொகு​திக்கு வரும் 23ம் தேதி இடைத்​தேர்​தல் நடைபெறுவ​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதில் ஆளும் மகா​யுதி கூட்டணி சார்பில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்​டி​யிட மனு தாக்​கல் செய்​தார்.

அஜித் பவார் மீதான மரி​யாதை​யின் காரண​மாக எதிர்க்கட்சிகளான முன்​னாள் முதல்​வர் சரத் பவார் தலைமையிலான தேசி​ய​வாத காங்​கிரஸ்​(எஸ்​பி), முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (உத்​தவ் பிரிவு) ஆகிய கட்​சிகள் வேட்​பாளர்​களை நிறுத்​த​வில்​லை. ஆனால், காங்​கிரஸ் கட்சி சார்​பில் மட்​டும் ஆகாஷ் மோரே வேட்பாள​ராக களம் இறக்​கப்​பட்டு இருந்​தார்.

இவரது வேட்பு மனு​வும் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்ட நிலை​யில், வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான நேற்று திடீர் திருப்​ப​மாக அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்​றார். இதனால், பாராமதி தொகு​தி​யில் சுனேத்ரா பவார் போட்​டி​யின்றி தேர்​வாக உள்​ளார். இது தொடர்​பான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளியாகும்​ என்​று தேர்​தல்​ ஆணை​ய வட்​டாரங்​கள்​ தெரிவித்தன.

மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் காங். வேட்பாளர் விலகல்: போட்டியின்றி தேர்வாகிறார் துணை முதல்வர்
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in