ஜாமீன் பெறுவதற்காக நீதிபதியை மிரட்டிய வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பு
ஜாமீன் பெறுவதற்காக நீதிபதியை மிரட்டிய வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

புதுடெல்லி: நீதிப​தியை மிரட்டிய வழக்​கில் இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகருக்கு 8 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரூ.50 கோடி லஞ்​சம் கொடுத்து இரட்டை இலை சின்​னம் பெற முயன்ற வழக்​கு, பிரபல தொழில​திபரிடம் பல நூறு கோடி மோசடி செய்​தது உள்​ளிட்ட பல வழக்​கு​களில் டெல்லி போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்ட இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகர், திஹார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்​கில் காவலில் இருந்த போது, சிறப்பு நீதிபதி பூனம் சவுத்​ரியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு முதலில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யின் தனிச் செய​லா​ளர் எனவும், பின்​னர் அந்த நீதிப​தியே பேசுவ​தாக​வும் கூறி, சுகேஷுக்கு உடனடி​யாக ஜாமீன் அல்​லது இடைக்​கால ஜாமீன் வழங்க வேண்​டும். ஜாமீன் வழங்​கா​விட்​டால் கடுமை​யான விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என்​று மிரட்​டல் விடுத்​துள்​ளார்.

பின்​னர் நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதி​மன்​றத்​தைத் தொடர்பு கொண்டு விசா​ரித்த போது, அத்​தகைய கோரிக்கை எது​வும் விடுக்​கப்​பட​வில்லை என்​பது தெரிய வந்​தது. இதையடுத்து நீதிபதி பூனம் சவுத்ரி அளித்த புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு தொடர்​பாகத் திஸ் ஹசாரி நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், சுகேஷ் சந்​திரசேகர் குற்​ற​வாளி என திஸ் ஹசாரி நீதி​மன்​றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்​பளித்​திருந்​தது.

இந்த வழக்​கில் சுகேஷ் சந்​திரசேகருக்​கான தண்​டனை விவரத்​தைத் தலைமை குற்​ற​வியல் நடு​வர் ஹர்​ஷிதா மிஸ்ரா நேற்று அறி​வித்​தார். இந்​திய தண்​டனைச் சட்​டத்​தின் 170-வது பிரி​வின் கீழ் அரசு ஊழியர் போல் ஆள்​மாறாட்​டம் செய்​ததற்​கும், 189-வது பிரி​வின் கீழ் அரசு ஊழியரை மிரட்​டியதற்​கும் தலா 2 ஆண்​டு​கள் கடுங்​காவல் தண்​டனை​யும், 507-வது பிரி​வின் கீழ் குற்​ற​வியல் மிரட்​டலுக்​காக 4 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும் விதிக்​கப்​படு​கிறது.

இந்​தத் தண்​டனை​கள் ஒன்​றன் பின் ஒன்​றாக அனுபவிக்க வேண்​டும் என்று நீதிபதி தீர்ப்​பளித்​தார். அதேவேளை​யில், இந்த தண்​டனை​களை ஒரே நேரத்​தில் அனுபவிக்க வேண்​டும் என்​றும், கருணை காட்ட வேண்​டும் என்​றும் சுகேஷ் சந்​திரசேகர் முன்​வைத்​த கோரிக்​கை​யை நீதிப​தி நிராகரித்​தார்​.

ஜாமீன் பெறுவதற்காக நீதிபதியை மிரட்டிய வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
தொடங்கியது ஷாங்காய் மாநாடு: மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in