மாணவர்களின் இடஒதுக்கீடு போராட்டம்: காஷ்மீரில் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டு காவல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தற்​போதுள்ள இட ஒதுக்​கீடு கொள்​கையை மாற்​றியமைக்க குழு ஒன்றை முதல்​வர் உமர் அப்​துல்லா அமைத்​தார். ஒராண்​டுக்கு மேலாகி​யும் இந்த குழு​வின் அறிக்கை வெளியாக​வில்​லை.

இதனால் காஷ்மீர் மாணவர்​கள் நேற்று போராட்​டம் நடத்த முடிவு செய்​தனர். இவர்​களுக்கு மெகபூபா முப்​தி, தேசிய மாநாட்டு கட்சி எம்​.பி. சையத் ருஹல்லா மெஹ்​தி, பிடிபி தலை​வர் வகீத் பாரா, நகர் முன்​னாள் மேயர் ஜுனைத் மாத்து ஆகியோர் ஆதரவு தெரி​வித்​தனர். இவர்​கள் மாணவர்​கள் போராட்​டத்​தில் கலந்து கொள்​வதை தடுக்க, நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.

இது குறித்து வகீத் பாரா கூறுகை​யில், ‘‘இடஒதுக்​கீட்டு பிரச்​சினைக்கு தீர்வு காணும் எண்​ணம் உமர் அப்​துல்லா அரசுக்கு இல்​லை. இதற்​காக முதல்​வர் உமர் அப்​துல்லா வீடு முன் ஓராண்​டுக்கு முன்பே போராட்​டம் நடத்​தினோம். இடஒதுக்​கீடு அறிக்​கையை பொது​வில் வெளி​யிட வேண்​டும். உமர் அப்​துல்​லா​வால் அமைக்​கப்​பட்ட அமைச்​சரவை துணைக் குழு​வின் அறிக்​கையை நிறுத்தி வைப்​பது நியா​யம் அல்ல’’ என்​றார்.

ருஹல்லா மெஹ்தி கூறுகையில், ‘‘எங்​கள் வீட்டு முன் போலீ​ஸார் நிறுத்​தப்​பட்​டுள்​ளனர். மாணவர்​களின் போ​ராட்டத்தை தடுக்க, இது முன்​னெச்​சரிக்​கை நடவடிக்​கை​யா?” என்​றார்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
காங்கிரஸ் கட்சி இந்திய ஆன்மாவின் குரல்: 140-வது நிறுவன நாளில் ராகுல் காந்தி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in