“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைத்து விட்டது மோடி அரசு” - சோனியா காந்தி குற்றச்சாட்டு

“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைத்து விட்டது மோடி அரசு” - சோனியா காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘ம​காத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு திட்​டத்தை மோடி அரசு சீர்​குலைத்​து​விட்​டது’’ என காங். மூத்த தலை​வர் சோனியா குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இது குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோ செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்​டத்தை பலவீனப்​படுத்​தி​யதன் மூலம் கோடிக்​கணக்​கான விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், நிலமற்ற விவ​சா​யிகள் மீது மோடி அரசு தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. கடந்த 11 ஆண்​டு​களாக, கிராமப்​புற ஏழைகளின் நலனை மத்​திய அரசு கண்​டு​கொள்​ள​வில்​லை.

20 ஆண்​டு​களுக்கு முன்பு ஏழைகளின் வாழ்​வா​தா​ரத்​துக்​காக கொண்​டு​வரப்​பட்ட புரட்​சிகர​மான நடவடிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்​டம். இதன் மூலம் தொழிலா​ளர்​கள் இடம் பெயர்​வது முடிவுக்கு வந்​தது. வேலை​வாய்ப்​புக்கு சட்ட உரிமை வழங்​கப்​பட்​டது.

கிராம சுய​ராஜ்ஜி​யம் என்ற காந்​தி​யின் தொலைநோக்கை நனவாக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. ஆனால் இத்​திட்​டத்​தில் புல்​டோசரை ஏற்றி மோடி அரசு நாச​மாக்​கி​விட்​டது. இத்​திட்​டத்​தில் மகாத்மா காந்​தி​யின் பெயர் மட்​டும் நீக்​கப்​பட​வில்​லை. இத்​திட்​டத்​தின் முழு வடிவ​மும், எந்த ஆலோ​சனை​யும் இன்றி மாற்​றப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைத்து விட்டது மோடி அரசு” - சோனியா காந்தி குற்றச்சாட்டு
நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in