கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்

விரைவில் தொடங்கி வைக்கிறார் மோடி
கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்
Updated on
1 min read

புதுடெல்லி: ​கொல்​கத்​தா- குவாஹாட்டி இடையி​லான வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரை​வில் தொடங்கி வைப்​பார் என ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

நாடு முழு​வதும் முக்​கிய வழித்​தடங்​களில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​படு​கிறது. விரை​வான பயணம், வசதி​யான இருக்​கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்​பறை, தானி​யங்கி கதவு​கள், சிசிடிவி கண்​காணிப்பு என பாது​காப்பு அம்​சங்​கள் மற்​றும் அதி நவீன வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்​ளது.

இந்த ரயில்​களில் தற்​போது இருக்கை வசதி மட்​டுமே உள்​ளது. இந்நிலை​யில் நீண்​ட தூர இரவு நேரப் பயணத்​துக்​காக தற்​போது படுக்கை வசதி கொண்ட ரயில்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் முதல் ரயில் மேற்கு வங்​கத்​தின் கொல்​கத்​தா​வில் இருந்து அசாமின் குவாஹாட்டி வரை இயக்​கப்பட உள்​ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று டெல்​லி​யில் கூறிய​தாவது: கொல்​கத்தா - குவாஹாட்டி இடையிலான ஸ்லீப்​பர் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரைவில் தொடங்​கி வைக்க உள்ளார்.

இந்த ரயி​லின் கட்டணங்கள் விமானக் கட்​ட​ணத்தை விட கணிச​மாக குறை​வாக இருக்​கும். இதன் சேவை அடுத்த 15- 20 நாட்​களில், ஜனவரி 18 அல்லது 19ம் தேதி வாக்​கில் செயல்​பாட்​டுக்கு வரும். இதனை தொடங்கிவைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளோம். அடுத்த 2-3 நாட்​களில் தேதியை அறி​விப்​பேன்.

குவாஹாட்​டி- ஹவுரா விமானப் பயணத்​துக்கு சுமார் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செல​வாகும். வந்தே பாரத் ரயி​லில் உணவு உட்பட 3-ம் வகுப்பு ஏசி கட்​ட​ணம் சுமார் ரூ.2,300 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசி சுமார் ரூ.3,000 ஆகவும், 1-ம் வகுப்பு ஏசி சுமார் ரூ.3,600 ஆகவும் இருக்​கும். நடுத்தர வர்க்​கத்​தினரை கருத்​தில் கொண்டு இந்​தக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்
நிரந்தர இடம் பெயர்வால் உ.பி.யில் 2.88 கோடி வாக்காளர்களின் எஸ்ஐஆர் படிவங்கள் தேக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in