சரத் பவாரின் என்சிபி - காங். இணைப்பு பேச்சுவார்த்தை

சரத் பவார்

சரத் பவார்

Updated on
1 min read

புதுடெல்லி: காங்​கிரஸ் கட்​சி​யுடன் சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸை இணைப்​பது குறித்த பேச்​சு​வார்த்தை இறு​திக் ​கட்​டத்தை எட்​டி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

கடந்த 1999ல் காங்​கிரஸ் கட்​சியி​லிருந்து வில​கிய மூத்த தலை​வர் சரத் பவார், தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சியை (என்​சிபி) தொடங்கினார். 2023ல் அவரது அண்​ணன் மகன் அஜித் பவார் அக்கட்​சியை உடைத்து பெரும்​பாலான எம்​எல்​ஏ-க்​களு​டன் மகா​ராஷ்டி​ரா​வில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்​ட​ணி​யில் இணைந்தார்.

இதையடுத்​து, சரத் பவார் மற்​றும் அஜித் பவார் ஆகிய இரு​வரின் தலை​மை​யில் 2 அணி​களாக என்​சிபி செயல்​பட்டு வரு​கிறது. இந்நிலை​யில் அஜித் பவார் சமீபத்​தில் நிகழ்ந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது மனைவி சுனேத்ரா பவார் என்​சிபி (அஜித் பவார்) தலை​வ​ராக உள்​ளார்.

இந்த சூழலில், சரத் பவார் தலை​மையி​லான என்​சிபியை காங்கிரஸ் கட்​சி​யுடன் இணைப்​பது குறித்து டெல்​லி​யில் உள்ள மூத்த தலை​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இது இறு​திக்​ கட்​டத்தை எட்​டி​யிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இது குறித்து மகா​ராஷ்டிர முன்​னாள் எதிர்க்​கட்​சித் தலை​வரும் காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான விஜய் வடேட்​டி​வார் கூறும்போது,"காங்​கிரஸ் கட்​சி​யுடன் என்​சிபியை இணைப்​பது குறித்து எங்​கள் கட்சி மேலிடத்​துடன் பேச்​சு​வார்த்தை நடைபெற்று வரு​கிறது. காங்​கிரஸ் மற்​றும் சரத் பவாரின் மதச்சார்​பற்ற கொள்​கைகளை ஏற்​கும் எவரும் எங்​கள் கட்​சிக்கு எப்​போதும் வரவேற்​கத்​தக்​கவர்​கள்" என்​றார்.

அதே ​நேரம் கட்​சி​யில் உள்ள ஒரு பிரி​வினர் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைய விருப்​பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்​படு​கிறது. மம்தா பானர்ஜி மற்​றும் உத்தவ் தாக்​கரே போன்ற பிராந்​தி​யத் தலை​வர்​கள் சமீபத்​தில் சந்தித்த அரசி​யல் பின்​னடைவு​களுக்கு மத்​தி​யில் இந்த இணைப்புப் பேச்​சு​வார்த்தை முக்​கி​யத்​து​வம்​ பெறுகிறது.

<div class="paragraphs"><p><em>சரத் பவார்</em></p></div>
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in