பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் இன்று முதல் ஒலிபரப்பு

பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் இன்று முதல் ஒலிபரப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அகில இந்​திய வானொலி​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: மே 25-ம் தேதி பத்ம விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​க​வுள்​ளார். இந்நிலையில், பத்ம விருது பெற்​றவர்​கள் குறித்த தொடர் ‘பீப்​பிள்ஸ் பத்மா ஆன் ஆகாஷ்​வாணி' என்ற பெயரில் மே 24-ம் தேதி (இன்று) முதல் ஒலிபரப்​பாக​வுள்​ளது. விருது பெற்​றவர்​களின் வாழ்க்​கைக் குறிப்​பு, அவர்​கள் செய்த சாதனை​கள் குறித்த பல்​வேறு தகவல்​கள் இதில் இடம்​பெறும்.

மே 24, 25-ம் தேதி​களில் காலை 9.10 மணி முதல் 100.1 என்ற அலை​வரிசை​யில் `ஆகாஷ்​வாணி கோல்ட்' என்ற தலைப்​பில் இந்த தொடர் ஒலிபரப்​பாகும். இந்த தொடரை நியூஸ் ஆன் ஏர் என்ற செல்​போன் செயலி, நியூஸ் ஆன் ஏர் என்ற யூடியூப் சேனலிலும் காணலாம்.

பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு பதவி​யேற்ற பின்​னர் அதி​கம் பிரபல​மா​காதவர்​களுக்கு பத்ம விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவர்​கள் குறித்த தகவல்​களை பொது​மக்​களும் தெரிந்து கொள்ள வேண்​டும் என்ற நோக்​கில் இந்த தொடர் தயாரிக்​கப்​பட்டு ஒலிபரப்​பாகிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் இன்று முதல் ஒலிபரப்பு
நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in