கரூர் நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் தவறு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

கரூர் நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் தவறு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் விசா​ரித்​த​தில் ஏதோ தவறு உள்​ளது என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கரூரில் கடந்த செப். 27-ல் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா அடங்​கிய அமர்வு, கடந்த அக். 13-ம் தேதி இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​தது. அதில், இவ்​வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட்​டதுடன், விசா​ரணையை உச்ச நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான குழு கண்​காணிக்​கும் என்​றும் தெரி​வித்​தது.

இந்​நிலை​யில், நேற்று மீண்​டும் நடை​பெற்ற விசா​ரணை​யின்​ போது, தனி நீதிபதி விசா​ரணைதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் தாக்​கல் செய்த அறிக்​கை​யைப் பரிசீலித்த நீதிப​தி​கள், “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் விசா​ரித்​த​தில் ஏதோ ஒரு தவறு உள்​ளது.

வழக்கை சரி​யாக நடத்தவில்​லை” என்​றனர். தமிழக அரசு சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், தமிழக அரசு பதில் மனு தாக்​கல் செய்​துள்​ளதை​யும், தற்​செய​லாக ஏற்​படும் விவ​காரம் தொடர்​பாக தாக்​கல் செய்​யும் மனுவுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பிக்​கிறது என்​றும் பதில் அளித்​தார்.

இதற்கு நீதிபதி ஜே.கே. மகேஸ்​வரி, “தவறான நடை​முறை​யாக இருந்​தால் என்​ன​வாகும்?” என்று கேட்​டார். பின்​னர் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், “வி​சா​ரணையை உச்ச நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான குழு கண்​காணிக்​கும் என்​றும், தமிழகத்​தைச் சேராதவர்​கள் குழு​வில் இருப்​பார்​கள் என்​றும் உத்​தர​விட்​டதை மாற்​றம் செய்ய வேண்​டும். ஓய்​வு​பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசா​ரணை ஆணைய விசா​ரணையை நிறுத்​தி​வைத்த உத்​தர​வை​யும் மாற்ற வேண்​டும்” என்று கோரிக்கை விடுத்​தார்.

அதை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், “தமிழகத்​தைச் சேராத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதி​காரி​களை கண்​காணிப்​புக் குழு​வில் இடம்​பெறச் செய்​ததற்​கு, அனைத்​தும் நியாய​மாக இருக்க வேண்​டும் என்று கரு​தி​யதே காரணம்” என்று விளக்​கம் அளித்​தனர். மேலும், கூடு​தல் இழப்​பீடு வழங்க உத்​தர​விடக் கோரிய மேல்​முறை​யீட்டு மனுவுக்கு பதில் அளிக்​க​வும் தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டதுடன்​, வி​சா​ரணை​யை பிப்​. 3-ம்​ தேதிக்​கு தள்​ளிவைத்​தனர்​.

கரூர் நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் தவறு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ரஜினிகாந்தின் 75-வது பிறந்​த​நாள் கொண்டாட்டம்: பிரதமர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in