கிறிஸ்தவராக மதம் மாறியவர்களுக்கு எஸ்சி.க்கான சலுகைகள் வழங்க கூடாது: உ.பி. அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கிறிஸ்தவராக மதம் மாறியவர்களுக்கு எஸ்சி.க்கான சலுகைகள் வழங்க கூடாது: உ.பி. அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பிரயாக்ராஜ்: ‘‘கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய எஸ்​சி.க்​களுக்கு ஜாதி அடிப்​படையி​லான சலுகைகளை வழங்க கூடாது. இதை உத்தர பிரதேச அரசு உறுதி செய்ய வேண்​டும்’’ என்று அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்​திர சஹானி என்​பவர் இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்தவ மதத்​துக்கு மாறி​யுள்​ளார். அதன்​ பிறகு இந்து கடவுள்​களைப் பற்றி அவதூறாக பேசி வந்​துள்​ளார். இதுதொடர்​பான புகாரின் அடிப்​படை​யில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். பின்​னர் இந்த வழக்​கில் குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​தனர். அதில், தன்​னுடைய சொந்த நிலத்​தில் இயேசு கிறிஸ்து பற்றி பிரசங்​கம் செய்​வதற்கு அதி​காரி​களிடம் இருந்து சஹானி அனு​மதி பெற்​றுள்​ளார் என்று கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், தன் மீது தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள குற்​றப்​பத்​திரி​கையை ரத்து செய்​ய​வும், வழக்​கில் இருந்து விடுவிக்​க​வும் கோரி அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் சஹானி மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த வழக்கை அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி கிரி விசா​ரித்து வந்​தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட பின்​னர் நீதிபதி கிரி அளித்த தீர்ப்​பில் கூறிய​தாவது:

மனு​தா​ரர் சஹானி தாக்​கல் செய்த மனு​வில், தான் இந்து மதத்தை சேர்ந்​தவர் என்று குறிப்​பிட்​டுள்​ளார். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறி​யுள்​ளார். அவர் மதம் மாறு​வதற்கு முன்​னர் எஸ்​.சி. பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவ​ராக இருந்​துள்​ளார். ஒரு​வர் இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்​தவ​ராக மதம் மாறி​விட்​டால், தானாகவே எஸ்​.சி.க்​களுக்​கான சலுகைகளை இழந்​து​விடு​வார்.

எனவே, பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர்​கள் வேறு மதத்​துக்கு மாறும்போது, அவர்​களுக்​கான சலுகைகள் நிறுத்​தப்பட வேண்​டும். இதை உத்தர பிரதேச அரசு உறு​திப்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். அப்​படி செய்​யா​விட்​டால், அது அரசி​யலமைப்பு சட்​டங்​களில் மோசடி செய்​வது போலாகும். அத்​துடன் இடஒதுக்​கீட்​டின் அடிப்​படை நோக்​கத்​துக்கு முரணாகி​விடும். எனவே, உ.பி. சிறு​பான்​மை​யினர் நலத்​துறை​யின் முதன்மை செயலர் இந்த விஷ​யத்​தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

கிறிஸ்தவ மதத்​தில் ஜாதி முறை​கள் இல்​லை. அப்​படி இருக்​கும் போது கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய பிறகு எஸ்​.சி.க்​கான சலுகைகளை பெறு​வது மோசடி​யாகும். இந்த விவ​காரத்​தில் மாவட்ட ஆட்​சி​யர்​கள் 4 மாதங்​களுக்​குள் இது​போன்ற நிகழ்​வு​களை அடை​யாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கிறிஸ்தவராக மதம் மாறியவர்களுக்கு எஸ்சி.க்கான சலுகைகள் வழங்க கூடாது: உ.பி. அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
200 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் மிகுந்த அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in