நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி
Updated on
1 min read

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான என்டிஏ அரசு எளிதில் வெற்றி பெற்றது.

பிஹாரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார் கடந்த 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி (57) பிஹார் முதல்வராக கடந்த 15-ம் தேதி பதவியேற்றார்.

பிஹாரில் முதல்முறையாக பாஜக தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து 243 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான என்டிஏ அரசு எளிதில் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி
ரூ.410 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in