காமேனி கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் பேரவையில் அமளி

காமேனி கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் பேரவையில் அமளி
Updated on
1 min read

ஜம்மு: ஈ​ரானின் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து தேசிய மாநாடு கட்சி எம்​எல்​ஏக்​கள் நடத்​திய போராட்​டத்​தால் ஜம்மு காஷ்மீர் சட்​டப்​பேர​வை​யில் நேற்று கடும் அமளி நில​வியது.

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி கூட்​டுத் தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பலர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில் காமேனி கொல்​லப்​பட்​டதற்​கும், ஈரான் மீதான அமெரிக்​க-இஸ்​ரேல் ராணுவ நடவடிக்​கைக்​கும் எதிர்ப்பு தெரி​வித்து ஜம்மு காஷ்மீர் சட்​டப்​பேர​வை​யில் தேசிய மாநாடு கட்சி எம்​எல்​ஏக்​கள் நேற்று போராட்​டம் நடத்​தினர். காமேனி படத்தை ஏந்தி அவர்​கள் முழக்​கமிட்​டனர்.

இதற்கு பாஜக உறுப்​பினர்​கள் ஆட்​சேபம் தெரி​வித்​து, எதிர் முழக்​கங்​களை எழுப்​பினர். இது, காங்​கிரஸ் எம்​எல்ஏ இர்​பான் ஹபீஸ் லோனே மற்​றும் பாஜக எம்​எல்ஏ யுத்​வீர் சேதி இடையே கைகலப்​புக்கு வழி​வகுத்​தது. இதனால் அவை​யில் கடும் அமளி நில​வியது. இதையடுத்து அமை​தியை ஏற்​படுத்த காவல் துறை​யினர் அவைக்​குள் வந்​தனர். அவை நடவடிக்கை சிறிது நேரம் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

ஈரானுக்கு ஆதர​வான போராட்​டம் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி எம்​.எல்.ஏ தன்​வீர் சாதிக் கூறுகை​யில், “எந்​தவொரு நாட்​டுக்​கும் மற்​றொரு நாட்டை தாக்க உரிமை இல்​லை.இந்​திய தலை​வர்​கள் இதை கண்​டிக்க வேண்​டும்” என்​றார்.

முன்​ன​தாக அவை​யில் இந்த விவ​காரம் குறித்து முதல்​வர் உமர் அப்​துல்லா பேசுகை​யில், “தங்​கள் ஆட்​சியை தேர்ந்​தெடுக்​கும் உரிமை அந்​தந்த நாட்​டின் குடிமக்​களுக்கு மட்​டுமே உள்​ளது. ராணுவத் தாக்​குதல்​கள் மூலம் ஆட்​சி மாற்​றத்​தை ஏற்​படுத்​த முடி​யாது” என்​றார்​.

காமேனி கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் பேரவையில் அமளி
திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in