

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
சமூக ஊடகங்கள் மக்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்கங்களுகாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தகவல் தொடர்புத் துறை மூலம் சில உள்ளடக்கங்கள் பரப்பப்படுகின்றன. மேலும் நமது தன்னார்வலர்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணிகள் விரிவடைந்து வருவதால், சமூக ஊடக செயல்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.