ஒடிசாவில் லஞ்சம் வாங்கும்போது கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்

ஒடிசாவில் லஞ்சம் வாங்கும்போது கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்​தில் லஞ்​சம் வாங்​கும் போது கையும் களவு​மாக பிடிபட்ட அதி​காரி வீட்​டில் ரூ.4 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது.

ஒடிசா மாநில சுரங்​கத் துறை துணை இயக்​குந​ராக பணி​யாற்றி வருபவர் தேவபிரதா மொகந்​தி. நிலக்​கரி விற்​பனைக்கு லைசென்ஸ் பெற்ற ஒரு வர்த்​தகரிடம் கடந்த செவ்​வாய்க்​ கிழமை ரூ.30 ஆயிரம் லஞ்​சம் பெற்​றுள்​ளார். அப்​போது விஜிலென்ஸ் அதிகாரி​கள் மொகந்​தியை கையும் களவு​மாகப் பிடித்​தனர். உடனடி​யாக ஒடிசா தலைநகர் புவனேஸ்​வரில் உள்ள அவரது அடுக்​கு​மாடி குடி​யிருப்பு மற்​றும் பத்​ராக் மாவட்​டத்​தில் உள்ள அவரது பெற்​றோர் வீடு​களில் ஒரே நேரத்​தில் விஜிலென்ஸ் அதிகாரி​கள் சோதனை நடத்​தினர்.

அப்​போது வீட்டு அலமாரி​களில் கட்​டுக்​கட்​டாகப் பணம் அடுக்கி வைக்​கப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மொத்​தம் ரூ.4 கோடி பணத்தை செவ்​வாய்க்​கிழமை இரவு விஜிலென்ஸ் அதிகாரிகள் பறி​முதல் செய்​தனர். மேலும், மொகந்​தி​யின் அலுவலக அறை மேசை டிராயரில் ரூ.1.20 லட்​சம் பறி​முதல் செய்யப்​பட்​டது.

அத்​துடன் புவனேஸ்​வரில் 2 அடுக்கு மாடி கொண்ட வீட்​டுக்​கான ஆவணங்​கள், 130 கிராம் தங்​கம் ஆகியவற்றை​யும் அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். இது​வரை பிடிபட்​ட​திலேயே இது​தான் அதி​கபட்ச தொகை என்று விஜிலென்ஸ் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மொகந்தி மீது ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதற்கு முன்​னர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​.7-ல் ஒடி​சா​வின் கஞ்​ஜம் மாவட்​டத்​தில் நீர்ப்​பாசன துறை உதவி பொறி​யாளர் வீட்​டில் ரூ.3.4 கோடியை விஜிலென்​ஸ் அதி​காரி​கள் பறி​முதல் செய்​தது ​தான் அதி​கபட்​ச​மாக இருந்தது குறிப்​பிடத்தக்​கது.

ஒடிசாவில் லஞ்சம் வாங்கும்போது கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் ரூ.11,000 கோடி முதலீடு - உ.பி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பலன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in