மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மாணவர்​களின் தற்​கொலை எண்​ணிக்கை முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் 14,488-பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது முந்​தைய ஆண்டை விட 4.3 சதவீதம் அதி​கம் என்று தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் (NCRB) வெளி​யிட்​டுள்ள புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

நாட்​டின் ஒட்​டுமொத்த தற்​கொலைகளின் எண்​ணிக்கை சற்றே குறைந்​திருந்​தா​லும், மாணவர்​கள் உயி​ரிழப்​பது அதி​கரித்​திருப்​பது பெரும் கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: 2023-ல் 1,71,418-ஆக இருந்த நாட்​டின் மொத்த தற்​கொலைகளின் எண்​ணிக்​கை, 2024-ல் 1,70,746-ஆக (0.4%) குறைந்​துள்​ளது. ஆனால், 2023-ல் 13,892-ஆக இருந்த மாணவர் தற்​கொலை 2024-ல் 14,488-ஆக அதி​கரித்​துள்​ளது.

கடந்த 10 ஆண்​டு​களில் (2015-2024) மாணவர் தற்​கொலை விகிதம் 62.2 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. 2015-ல் 8,934-ஆக இருந்த இந்த எண்​ணிக்கை தற்​போது 14,488-ஐ எட்​டி​யுள்​ளது. மாணவர்​கள் தற்​கொலை​யில் மகா​ராஷ்டிரம் (13.2%) முதலிடத்​தில் உள்​ளது. அதனைத் தொடர்ந்து உத்​தரப் பிரதேசம் (10.9%), மத்​தி​யப் பிரதேசம் (10%) மற்​றும் தமிழ்​நாடு (8.9%) ஆகிய மாநிலங்​கள் அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

கல்​வித் தகு​தி​யின் அடிப்​படை​யில் பார்த்​தால், 10-ம் வகுப்பு வரை படித்த மாணவர்​களே அதி​கள​வில் (25.6%) தற்​கொலை செய்​துள்​ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக 12-ம் வகுப்பு (18.3%) மற்​றும் 8-ம் வகுப்பு (17.7%) பயின்ற மாணவர்​கள் உள்​ளனர். இவ்​வாறு புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்': அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in