மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது

மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவர் மச்சிந்த்ரா துக்காராம் (28) அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் விஜயா சிங் (47) என்ற நோயாளி, வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கோப மடைந்த உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவர் துக்காராமை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் 10 பேரை கைது செய்தனர்.

மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது
சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு போடுங்கள்: மம்தா உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in