தீவிரவாதிகளின் நீர்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஒத்திகை

தீவிரவாதிகளின் நீர்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஒத்திகை
Updated on
1 min read

புதுடெல்லி: தீவிர​வாத தாக்​குதல்​களை சமாளிக்​கும் வகை​யில் நாடு முழு​வ​தி​லும் தேசிய பாது​காப்பு படைகளின் தயார்​நிலை உறு​திப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. டெல்​லி​யில் நவம்​பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்​டு​வெடிப்​புக்கு பிறகு இது மிக​வும் அவசி​ய​மாகி விட்​டது.

அந்த வகை​யில் உ.பி.​யில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் தொகு​தி​யான வாராணசி​யில் 'ஆபரேஷன் கங்கா கார்​டு' எனும் பெயரில் நீர்​வழித் தாக்​குதல் தடுப்பு ஒத்​திகை பயிற்சி கங்கை நதி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது.

தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி), தேசி​யப் பேரிடர் மீட்​புப் படை (என்​டிஆர்​எப்), இந்​திய விமானப் படை (ஐஏஎப்), இந்​திய உள்​நாட்டு நீர்​வழி ஆணை​யம் (ஐடபுள்​யுஏ) ஆகிவற்​றுடன் உ.பி. காவல்​துறை இணைந்து வாராணசி​யின் ரவி​தாஸ் காட் பகு​தி​யில் இதனை நடத்​தி​யது.

சுற்​றுலா கப்​பலில் உள்ள பயணி​கள் தீவிர​வா​தி​களால் துப்​பாக்கி முனை​யில் பிடிக்​கப்​பட்​டால் அதை முறியடித்து பயணி​களை மீட்​பது குறித்து ஒத்​திகை பார்க்​கப்​பட்​டது. இந்த ஒத்​திகையில் உ.பி. காவல்​துறை சார்​பில் வாராணசி துணை ஆணை​யர் டி.சர​வணன் முக்​கியப் பங்​காற்​றி​னார்.

இந்து தமிழ் திசை நாளேட்​டிடம் அவர் கூறுகை​யில், ‘‘இந்​தப் பயிற்சி வளர்ந்து வரும் நதி சார்ந்த சுற்​றுலாவை பாது​காப்​ப​தற்​கும் நீர்​வழிப் பாது​காப்பை மேம்​படுத்​து​வதற்​கும் பயன்​படும். முக்​கிய​மாக தீவிர​வா​தி​களின் நீர்​வழித் தாக்​குதலை சமாளிக்​கும் வகை​யில் நமது பாது​காப்பு படைகளின் முறை​யானப் பயிற்​சி​யும் இதில் சோதிக்​கப்​பட்​டது.

இத்​தகைய பயிற்சி பல்​வேறு பாது​காப்​புப் படை​யினர் இடையே ஒருங்​கிணைப்பு மற்​றும் உடனடி எதிர்​தாக்​குதல் திறன்​களை மேம்​படுத்​த​வும் உதவு​கிறது. டெல்லி கார் குண்டு வெடிப்​புக்கு பிறகு வாராணாசி​யில் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது’’

காசி எனும் வாராணசி​யில் பழம்​பெரும் புனிதத்​தல​மான காசி விஸ்​வ​நாதர் கோயில், சங்கட மோர்ச்​சன் கோயில், காலபைர​வர் கோயில், காசி விசாலாட்சி கோயில் என பல ஆலயங்​கள் உள்​ளன. வா​ராணசி​யில் இது​வரை தீவிர​வா​தி​களின்​ மூன்​று தாக்​குதல்​களில்​ சுமார்​ 70 பேர்​ இறந்​துள்​ளனர்​.

தீவிரவாதிகளின் நீர்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஒத்திகை
பெங்களூரு ஏடிஎம் வேன் கொள்ளை: கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் கைது, ரூ.6.29 கோடி பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in