

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்ற தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ செல்கிறார்.
பிற்பகல் 2:30 மணியளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களை போற்றும் வகையில் லக்னோவில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ (தேசிய உத்வேக தலம்) வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
சுமார் ரூ.230 கோடி செலவில், 65 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 98,000 சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன அருங்காட்சியகமும் இங்கு அமைந்துள்ளது. டிஜிட்டல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தலைவர்களின் பங்களிப்புகளை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது.