சுதர்ஸன சக்கரம் உருவாக்கம்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

சுதர்ஸன சக்கரம் உருவாக்கம்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையத்​தின் (டிஆர்​டிஓ) 68-ம் ஆண்டு விழாவை முன்​னிட்டு அதன் தலை​மையக்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

கடந்​தாண்டு சுதந்​திர தினத்​தில் செங்​கோட்​டை​யில் உரை​யாற்​றிய பிரதமர் மோடி சுதர்ஸன சக்கர திட்​டத்தை அறி​வித்​தார். இத்​திட்​டத்தின்படி நாட்​டில் உள்ள முக்​கிய இடங்​கள் அனைத்​தி​லும் வான் பாதுகாப்பு கருவி​கள் நிறு​வப்​படும். வான் பாது​காப்பு கரு​வி​யின் முக்​கி​யத்​து​வத்தை நாம் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது பார்த்​தோம். இது டிஆர்​டிஓ அமைப்​பின் செயல்​பாடு மற்​றும் உறு​திக்கு சான்​றாக உள்​ளது. நாட்​டின் முக்​கிய இடங்​கள் அனைத்​தி​லும் சுதர்ஸன சக்​கரம் வான் பாது​காப்பு கருவி​கள் அமைக்​கும் இலக்கை டிஆர்​டிஓ விரை​வில் அடை​யும்.

புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் மற்​றும் தனி​யார் துறை​களின் பங்​களிப்பை அதி​கரிப்​ப​தில் டிஆர்​டிஓ தொடர்ந்து கவனம் செலுத்த வேண்​டும். டிஆர்​டிஓ தனது தயாரிப்​பு​கள், செயல்​பாடு​களை தொடர்ந்து மேம்​படுத்தி வரு​கிறது. இவ்​வாறு ராஜ்​நாத் கூறி​னார்.

சுதர்ஸன சக்கரம் உருவாக்கம்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
தோனி முதல் ரொனால்டோ வரை: 2026-ல் ஓய்வு பெறக்கூடிய ஆடுகள நாயகர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in