ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது.

ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்ட பயணி​களின் எண்​ணிக்கை எவ்​வளவு என்ற விவரத்தை தகவல் அறி​யும் உரிமை சட்​டம் மூலம் சந்​திர சேகர் கவுர் என்​பவர் கேட்​டுள்​ளார்.

இதற்கு ரயில்வே அளித்த பதிலில் கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டில் 3.39 கோடி பயணி​கள் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து இடம் கிடைக்​காத​தால் அவர்​களின் டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2021-22-ம் ஆண்​டில் டிக்​கெட் உறுதி செய்​யப்​ப​டா​மல் ரத்து செய்​யப்​படும் பயணி​களின் எண்​ணிக்கை 1.65 கோடி​யாக இருந்​தது.

2022-23-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 2.72 கோடி​யாக உயர்ந்​தது. 2023-24-ம் ஆண்​டில் இது 2.96 கோடி​யாக உயர்ந்​தது. கடந்த நிதி​யாண்​டில் இது 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. டிக்​கெட் ரத்​தாவதன்​மூலம் பண இழப்பு உள்​ளிட்ட அதிக பாதிப்​பு​களை சந்​திப்​பது படுக்கை வசதி மற்​றும் 3-ம் வகுப்பு ஏசி வகுப்​பில் முன்​ப​திவு செய்​யும் பயணி​கள் என்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

ஒவ்​வொரு நாளும் 92,877 பயணி​கள், ஒவ்​வொரு மணி நேர​மும் 3,870 பயணி​கள், ஒவ்​வொரு நிமிட​மும் 64 பயணி​கள், ஒவ்​வொரு விநாடி​யும் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட பயணி​கள் தங்​கள் டிக்​கெட் உறுதி செய்​யப்​படும் வாய்ப்பை இழக்​கின்​றனர்​.

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in