“உண்மை, அகிம்சை வழியில் செயல்பட்டு பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவோம்” - ராகுல் காந்தி உறுதி

“உண்மை, அகிம்சை வழியில் செயல்பட்டு பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவோம்” - ராகுல் காந்தி உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: மோடி-ஆர்​எஸ்​எஸ் ஆட்​சியை அகற்ற உண்மை மற்​றும் அகிம்சை வழி​யில் செயல்​படு​வோம் என்று ராகுல் காந்தி கூறி​னார்.

டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘வாக்​குத் வாக்கு திருட்டு, பதவி வில​குங்​கள்’ முழக்க பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் மூத்த தலைவரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தேர்​தல் ஆணை​யம் மீது கடும் தாக்​குதலை தொடுத்​தார். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​வீர் சிங் சாந்​து, விவேக் ஜோஷி ஆகியோர் பாஜக​வுக்​காக பணிபுரிவ​தாக குற்​றம் சாட்​டி​னார்.

இக்​கூட்​டத்​தில் ராகுல் மேலும் பேசி​ய​தாவது: நாங்​கள் சத்​தி​யத்​தின் பக்​கம் நின்று பிரதமர் நரேந்​திர மோடி-ஆர்​எஸ்​எஸ் அரசை அதி​காரத்​திலிருந்து அகற்​று​வோம். அவர்​களிடம் அதி​காரம் இருக்​கிறது, அவர்​கள் வாக்​குத் திருட்​டில் ஈடு​படு​கிறார்​கள்.

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்​தல் நேரத்​தில் பெண்​களுக்கு பாஜக அரசு தலா ரூ.10,000 பணப் பரி​மாற்​றம் செய்​தது. ஆனால் தேர்​தல் ஆணை​யம் அவர்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

உண்​மைக்​கும் பொய்க்​கும் இடையி​லான இந்​தப் போரில் பாஜக அரசுடன் இணைந்து தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​கிறது.

தேர்​தல் ஆணை​யர்​களுக்கு பாது​காப்பு வழங்​கும் புதிய சட்​டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்​துள்​ளார். நாங்​கள் இந்த சட்​டத்தை முன்​தே​தி​யிட்டு மாற்​று​வோம். தேர்​தல் ஆணை​யர்​கள் மீது நடவடிக்கை எடுப்​போம். இதற்கு கால​தாமதம் ஆகலாம், ஆனால் இறு​தி​யில் உண்​மை​தான் வெல்​லும். மோடியை​யும் அமித் ஷாவை​யும் தோற்​கடிக்க நாங்​கள் உண்மை மற்​றும் அகிம்சை வழி​யில் செயல்​படு​வோம்​. இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​னார்​.

“உண்மை, அகிம்சை வழியில் செயல்பட்டு பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவோம்” - ராகுல் காந்தி உறுதி
மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உ.பி. பாஜக தலைவரானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in