டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்

டெல்லியில் ஏராளமானோர் திரண்டதால் பதற்றம்
டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்​லி, மும்பை, கொல்​கத்​தா, குவாஹாட்​டி, அகர்​தலா, சிலிகுரி​யில் உள்ள வங்​கதேச தூதரகங்​கள் முன்பு நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன. டெல்​லி​யில் ஏராள​மானோர் திரண்​டு, போலீஸ் தடுப்​பு​களை உடைத்து முன்​னேறிய​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.

கடந்த 2024-ம் ஆண்​டில் வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. அப்​போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்சம் அடைந்​தார். அவரை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

தற்​போது வங்​கதேசத்​தில் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த நாட்​டில் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத்​தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. இந்த தேர்​தலில் பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்​சி,

வங்​கதேச தேசிய கட்​சி, வங்​கதேச ஜமாத் இ இஸ்​லாமி உள்​ளிட்ட பிர​தான கட்​சிகள் போட்​டி​யிடு​கின்​றன. முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் தேர்தலில் போட்​டி​யிட தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் இன்​கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழு​வின் மூத்த தலை​வரும், டாக்கா 8 தொகு​தி​யின் வேட்​பாள​ரு​மான ஷெரீப் உஸ்​மான் ஹாடி அண்​மை​யில் மர்ம நபரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அவரை சுட்​ட​தாக சந்​தேகிக்​கப்​படும் பைசல் கரீம் இந்​தி​யா​வில் பதுங்கி இருப்​ப​தாக வங்​கதேச சமூக வலை​தளங்​களில் தகவல்​கள் பரப்​பப்​பட்​டன.

இதன்​ காரணமாக வங்​கதேசத்​தில் வாழும் சிறுபான்மை இந்​துக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு வருகின்​றன. கடந்த 18-ம் தேதி மைமன்​ சிங் மாவட்​டம், பலுகா பகு​தியை சேர்ந்த தீபு சந்​திர தாஸ் (30) அடித்​துக் கொலை செய்யப்​பட்​டார்.

இதைக் கண்​டித்து இந்​தி​யா​வில் செயல்​படும் வங்​கதேச தூதரகங்​கள் முன்பு விஎச்பி உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் கடந்த சில நாட்​களாக போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக டெல்​லி, மும்பை, கொல்​கத்​தா, குவாஹாட்​டி, அகர்​தலா, சிலிகுரி ஆகிய நகரங்​களில் உள்ள வங்​கதேச தூதரகங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்டு உள்​ளன.

இந்த சூழலில் விஎச்​பி, பஜ்ரங் தளம், சர்வ பார​திய இந்தி பெங்​காலி சங்​கம் உள்​ளிட்ட அமைப்​பு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் நேற்று டெல்​லி​யில் உள்ள வங்​கதேச தூதரக அலு​வல​கம் முன்பு குவிந்​தனர். அவர்​கள் போலீஸ் தடுப்​பு​களை தாண்டி முன்​னேறினர். இதனால் பெரும் பதற்​றம் எழுந்​தது. போராட்​டக்​காரர்​களை போலீ​ஸார் கைது செய்து அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர்.

மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தாவில் உள்ள வங்​கதேச தூதரகம் முன்பு நேற்று பாஜக மற்​றும் இந்து அமைப்​பு​களை சேர்ந்த ஏராள​மானோர் குவிந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸாருக்​கும் போராட்​டக்​காரர்களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர்.

மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை, திரிபுரா தலைநகர் அகர்​தலா, அசாமின் குவாஹாட்​டி, மேற்​கு​வங்​கத்​தின் சிலிகுரி பகு​தி​களில் வங்​கதேச கிளை தூதரகங்​கள் செயல்​படு​கின்​றன. அந்த தூதரகங்​கள் முன்பு பாஜக, விஎச்பி உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் சார்​பில் நேற்று போ​ராட்​டம் நடை​பெற்​றது. உத்தர பிரதேச தலைநகர் லக்​னோ, மத்​திய பிரதேச தலைநகர் போ​பால், காஷ்மீரின் ஜம்​மு பகு​தி உட்​பட நாடு முழு​வதும்​ பல்​வேறு இடங்​களில்​ வங்​கதேச அரசை கண்​டித்​து நேற்​று போ​ராட்​டங்கள்​ நடைபெற்​றன.

இந்திய தூதருக்கு சம்மன் வங்கதேச வெளியுறவுத் துறை சார்பில் அந்த நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி இந்திய தூதர் பிரணாய் வர்மா நேற்று காலை டாக்காவில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது வங்கதேச வெளியுறவு செயலாளர் ஆசாத் ஆலம் சியாம், இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஆழ்ந்த

கவலை தெரிவித்தார். வங்கதேச தூதரகங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய தூதரிடம் அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா. சபை கண்டனம்: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தரேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. அங்கு ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் கடமை. தீபு சந்திர தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை ஐ.நா. சபை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “வங்கதேசத்தில் அனைத்து சமூக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இப்போதைய சூழலில் வங்கதேசத்தில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

10,000 இந்திய மாணவர்களின் நிலை? - வங்கதேசத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “வங்கதேசத்தில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in