ஹைதராபாத்: சாதாரண பெண் போல நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி

3 மணி நேரத்தில் 40 ஆண்கள் தொந்தரவு
ஹைதராபாத்: சாதாரண பெண் போல நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் பெண்​களின் பாது​காப்பை ஆய்வு செய்ய பெண் போலீஸ் அதி​காரி ஒரு​வர் நள்​ளிர​வில் 3 மணி நேரம் தனி​யாக ஒரு சாலை​யில் நின்​றார். அவருக்கு அவ்​வழி​யாக சென்ற 40 பேர் பாலியல் தொந்​தரவு கொடுக்க முயற்​சித்​துள்​ளனர். அவர்​கள் மீது மல்​காஜ்கிரி போலீஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

ஹைத​ரா​பாத் மல்​காஜ்கிரி காவல் ஆணை​யர் சும​தி. இவர் பொறுப்​பேற்ற முதல் நாளி​லேயே, அப்​பகு​தி​யில் பெண்​கள் பாது​காப்பு எவ்​வாறு உள்​ளது என தெரிந்து கொள்ள முடிவு செய்​தார். அதன்​படி, சீருடை​யில் செல்​லாமல் சுடி​தார் அணிந்து கொண்டு மல்​காஜ்கிரி பேருந்து நிலை​யம் அருகே உள்ள ஒரு சாலை​யில் நள்​ளிரவு 12.30 மணி முதல் அதி​காலை 3.30 மணி வரை தனி​யாக நின்​றார்.

அப்​போது அவ்​வழியே சென்​றவர்​களில் படித்த இளைஞர்​கள், அலு​வலக ஊழியர்​கள், குடி​போதை​யில் இருந்​தவர்​கள் என 40 பேர் இவரை அணுகி, பாலியல் தொந்​தரவு கொடுத்​துள்​ளனர். அப்​போது அங்கு மறைந்​திருந்த போலீ​ஸார் அவர்​களை பிடித்​துச் சென்று காவல் நிலை​யத்​தில் அமர வைத்​தனர். ஒரு பெண் தனி​யாக இருந்​தால் அப்​பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்​பீர்​களா என தங்​கள் பாணி​யில் விசா​ரித்​தனர். பிறகு அவர்​களின் குடும்​பத்​தினரை வரவழைத்து விவரங்​களை எடுத்​துக் கூறினர். இதுகுறித்து 40 பேர் மீது வழக்​குப் பதிவு செய்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த சம்​பவம் குறித்து காவல் துறை ஆணை​யர் சுமதி கூறுகையில், “எனது கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​தி​யில் பெண்களின் பாது​காப்பை அறிய தீர்​மானித்​தேன். அதனால் நள்ளிர​வில் சாலை​யில் தனி​யாக நின்​றேன். 40 பேர் என்​னிடம் வந்து வம்​பிழுத்​தனர். தகாத வார்த்​தைகளைப் பேசினர். இதில் மாணவர்​களே அதி​கம். மது அருந்​தி​ய​வர்​கள், கஞ்சா உபயோகித்​தவர்​களும் இதில் உள்​ளனர். அவர்​கள் அனை​வரை​யும் விசாரித்து, அவர்​களின் குடும்​பத்​தினரை வரவழைத்து நடந்​தவற்றை கூறி கவுன்​சிலிங் செய்​தோம். போதை ஆசாமிகளுக்கு அபராதம் விதித்​தோம். கஞ்சா ஆசாமிகளிடம் தொடர்ந்து விசாரித்து வரு​கிறோம். தனி​யாக உள்ள பெண்​களிடம் வம்பிழுத்தால் தண்​டனை​யில் இருந்து தப்ப முடி​யாது என்ற பயம் ஆண்​களிடையே வரவேண்​டும் என்​ப​தற்​காக இப்​படி செய்​தோம்” என்​றார்.

பெண் போலீஸ் அதி​காரி​யின் இந்த செயலை பொது​மக்​கள் பாராட்டி வரு​கின்​றனர். சுமதி கடந்த 25 ஆண்​டு​களுக்கு முன் டிஎஸ்​பி​யாக இருந்​த​போது காஜிபேட்டை ரயில் நிலை​யம் அருகே நள்​ளிர​வில் தனி​யாக நின்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலரை கைது செய்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஹைதராபாத்: சாதாரண பெண் போல நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி
தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in