ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு

ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் நடந்த காணிக்கை திருட்டை உ.பி. அரசு அமைத்த சிறப்பு புல​னாய்​வுக் குழு (எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது. இதன் இடைக்​கால அறிக்கை அடிப்​படை​யில் அயோத்தி நகர காவல் நிலை​யத்​தில் வழக்​கு​கள் பதி​வாகி 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​கள் திருடிய வைரம், தங்​கம், வெள்ளி நகைகள் மற்​றும் ரொக்​கப் பணம் என அனைத்​தை​யும் மீட்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

திருடப்​பட்ட நன்​கொடைகளை பயன்​படுத்தி பல்​வேறு சொத்​துகளை குற்​ற​வாளி​கள் சேர்த்​துள்​ளனர். இதன் விவரம் சேகரிக்​கப்​பட்டு வரு​கிறது. உ.பி.​யில் கிரிமினல் பட்​டியலில் இடம்​பெற்ற குற்​ற​வாளி​களின் சட்​ட​விரோத சொத்​துகள் குண்​டர் சட்​டத்​தின் சில பிரிவு​களின் கீழ் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதே நடை​முறையை பின்​பற்​றி, திருடப்​பட்ட காணிக்​கையை மீட்​டெடுக்க உ.பி. அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. திருடப்​பட்ட காணிக்கை அளவை காவல்​துறை முழு​மை​யாக கணக்​கிட்டு வரு​கிறது. எனினும், இவை திருடத் துவங்​கிய தினம் இன்​னும் சரி​யாகத் தெரி​யாத​தால், அதன் மொத்த மதிப்பை கணக்​கிடு​வது எளிதல்ல எனக் கருதப்​படு​கிறது.

இந்த வழக்​கில் கைதான 8 பேரில் ஒரு​வ​ரான லவ்​குஷ் மிஸ்​ரா, அயோத்​திக்கு அரு​கில் ஒரு மாளிகை கட்டி வரு​கிறார். ரூ.12,000 மாதச் சம்​பளம் பெற்ற இவர் தன் மனைவி பெயரில் இந்த சொத்தை வாங்கி உள்​ளார். இந்​தக் கட்​டிடத்​துக்​கான அரசு அனு​ம​தி​களில் பல்​வேறு குறை​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் குற்​ற​வாளி​களில் முதல் நபராக லவ்​குஷின் கட்​டிடத்தை புல்​டோச​ரால் இடிக்க உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது. இது​போன்ற நடவடிக்கை வழக்​க​மாக கடும் குற்​றம் புரிந்​தவர்​கள் மீது எடுக்​கப்​படு​கிறது.

காணிக்கை பணம் எண்​ணும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த மேலும் 5 பேரின் செயல்​பாடு​கள் சந்​தேகத்​திற்​குரிய​தாக உள்​ளது. காவல் துறை​யினர் அவர்​களிட​மும் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். ஆதா​ரங்​களை சரி​பார்த்த பிறகு மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், பணம் எண்​ணும் அறைக்கு வெளியே இருந்த சிலரின் பெயர்​களும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. நேற்று பணி​யில் இருந்த தனி​யார் பாது​காப்​புப் பணி​யாளர்​களிட​மும் காவல் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர்.

கோயி​லின் காணிக்கை பாது​காப்​புக்​காக தற்​போது சிஆர்​பிஎப் மற்​றும் மாநில பாது​காப்பு படை​யினர் நிறுத்​தப்​பட்​டுள்​ளனர். இவர்​களது முழு​மை​யான ஒழுங்​கு​முறையை உறுதி செய்​வதற்​காக, ஒவ்​வொரு 15 நாட்​களுக்​கும் அனைத்து அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களின் பணி​யிடங்​கள் மாற்​றப்​படு​கின்​றன. இது​வரை பின்​பற்​றப்​ப​டாத இந்த நடை​முறை​யால்​தான் ராமர் கோயி​லில் மிகப்​பெரிய தவறு நடை​பெற்​றுள்​ளது.

இச்​சூழலில் ஸ்ரீராமஜென்​மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் முக்​கிய நிர்​வாகி​களான சம்​பக் ராய், அனில் மிஸ்​ரா, கோபால் ராவ் மீது அயோத்தி வழக்​கறிஞர்​கள் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்​திருந்​தனர். இதற்​கான புகாரை நேற்​று அயோத்​தி நகரக்​ காவல்​ நிலை​யத்​தில்​ அளித்​துள்​ளனர்​.

ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு
தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in