அசாம், மே.வங்கத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

அசாம், மே.வங்கத்தில்  பிரதமர் மோடி சுற்றுப் பயணம்
Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாமில் 2 நாள் பயண​மாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்​வேறு நலத்​திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்.

இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

அப்போது, பரஜாகுலி - கிருஷ்ணா நகர் பகுதியில் என்எச்-34 வழித்தடத்தில் 66.7 கி.மீ. தூரத்துக்கு அமைக் கப்பட்டுள்ள 4 வழிச் சாலையை தொடங்கி வைக்கிறார். பின்னர் அசாம் மாநிலத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்கு செல்கிறார்.

குவாஹாட்டி விமான நிலை​யம் வந்​தடை​யும் பிரதமரை, முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட முக்​கிய பிர​முகர்​கள் வரவேற்​கின்​றனர்.

பின்​னர் ரூ.4,000 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய லோக்​பிரியா கோபி​நாத் பார்​டோலாய் (எல்​ஜிபிஐ) சர்​வ​தேச விமான நிலை​யத்தை திறந்து வைத்து 15 நிமிடங்​கள் சுற்​றிப் பார்க்​கிறார். இந்த விமான நிலை​யத்​தின் வெளி​யில் அசாம் மாநிலத்​தின் முதல் முதல்​வர் கோபி​நாத் பார்​டோலா​யின் 80 அடி உயர உரு​வச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்​கிறார்.

பின்னர் பஷிஸ்தா பகு​தி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் கட்சி நிர்​வாகி​களு​டன் கலந்​துரை​யாடு​கிறார். நாளை ஞாயிற்​றுக்​கிழமை மாணவர்​களு​டன் கலந்​துரை​யாடல், பிரம்​மபுத்ரா நதி​யில் கப்​பலில் பயணம் போன்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.

அசாம், மே.வங்கத்தில்  பிரதமர் மோடி சுற்றுப் பயணம்
மக்களவையில் 111 சதவீத அலுவல்கள்: ஓம் பிர்லா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in