

புதுடெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகச் சிறப்பானது. அதேபோல் தமிழ் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
நமது சமூகத்துக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.