ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை: சோமநாதர் கோயில் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை: சோமநாதர் கோயில் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
2 min read

புதுடெல்லி: குஜராத்தின் சோமநாதர் கோ​யில், ஆயிரம் ஆண்​டு​களின் அணை​யாத நம்​பிக்கை என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் கிர்​சோம்​நாத் மாவட்​டம், பிர​பாச பட்​டினம் கடற்​கரை​யில் சோம​நாதர் கோயில் அமைந்​துள்​ளது. ஆப்​கானிஸ்​தானின் கஜினி நகரை தலை​மை​யிட​மாக கொண்டு ஆட்சி செய்த கஜினி முகமது கடந்த 1026-ம் ஆண்டு சோம​நாதர் கோயில் மீது தாக்​குதல் நடத்தி ஏராள​மான செல்​வங்​களை கொள்​ளை​யடித்து சென்​றார்.

அதன்​பிறகு முகலாய ஆட்​சி​யாளர்​களால் சோம​நாதர் கோயில் பலமுறை தாக்​கப்​பட்​டது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு நாட்​டின் முதல் குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத், முதல் துணை பிரதமர் சர்​தார் வல்​லப​பாய் படேலின் முயற்​சி​யால் சோம​நாதர் கோயில் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​பட்​​டது.

கஜினி முகமது​வின் தாக்​குதலுக்கு பிறகு ஆயிரம் ஆண்​டு​களை கடந்து சோம​நாதர் கோயில் கம்​பீர​மாக நிற்​கிறது. இதை நினை​வு​கூரும் வகை​யில் சோம​நாதர் சுயமரி​யாதை பெரு​விழா என்ற பெயரில் வரும் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சோம​நாதர் கோயி​லில் சிறப்பு பூஜை, வழி​பாடு​கள் நடை​பெற உள்​ளன. 11-ம் தேதி நடைபெறும் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி தனது இணைய பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த காலங்​களில் துர​திஷ்ட​வச​மாக சோம​நாதர் கோயில் வெளி​நாட்​டுப் படையெடுப்​பாளர்​களால் தாக்​கப்​பட்​டது.

இந்த மாபெரும் புண்​ணி​யத் தலத்​தின் மீது முதல் தாக்​குதல் நடத்​தப்​பட்டு 1,000 ஆண்​டு​கள் ஆகிறது. 1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்​தில்​தான் கோயில் மீது கஜினி முகமது தாக்​குதல் நடத்​தி​னார். வன்​முறை மிகுந்த, கொடூர​மான படையெடுப்​பின் மூலம் இந்​தி​யா​வின் நம்​பிக்​கை, நாகரி​கத்தை பறை​சாற்​றும் மாபெரும் கலாச்​சார சின்​னத்தை அழிக்க அவர் முயன்​றார்.

எனினும் சோம​நாதர் கோயிலை அதன் பழைய பெரு​மையோடு மீட்​டெடுக்க எண்​ணற்ற முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதனால் இந்த கோயில் முன்​பை​விட​வும் இப்​போது பொலிவுடன் நிற்​கிறது. கடந்த 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி அப்​போதைய குடியரசுத்​தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத் முன்​னிலை​யில் புதுப்​பிக்​கப்​பட்ட கோயில் திறக்​கப்​பட்​டது.

நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு சோம​நாதர் கோயிலை மீண்​டும் கட்டி எழுப்​பும் புனித​மான கடமை சர்​தார் வல்​ல​பபாய் படேலின் கைகளுக்​குச் சென்று சேர்ந்​தது. இந்த கோயிலை கட்ட அப்​போதைய பிரதமர் ஜவஹர்​லால் நேரு ஆர்​வம் காட்​ட​வில்​லை. புனரமைக்​கப்​பட்ட கோயி​லின் திறப்பு விழா​வில் குடியரசுத் தலை​வரும் அமைச்​சர்​களும் பங்​கேற்​ப​தைகூட நேரு விரும்​ப​வில்​லை. இந்த நிகழ்வு இந்​தியா பற்றி ஒரு தவறான எண்​ணத்தை உரு​வாக்​கும் என்று அவர் கூறி​னார். ஆனால் அன்​றைய குடியரசுத் தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத் மிக​வும் உறு​தி​யாக இருந்து கோயில் திறப்பு விழா​வில் பங்​கேற்​றார்.

சோம​நாதர் கோயில், ஆயிரம் ஆண்​டு​களின் அணை​யாத நம்​பிக்கை ஆகும். சோம​நாதரின் ஆசி​யுடன் வளர்ச்​சி​யடைந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை நோக்கி பயணிப்​போம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை: சோமநாதர் கோயில் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கிய விவகாரம்: வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in